முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
kerala-polling-2024-04-26

திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். 

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். 

இந்த நிலையில், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பாலக்காடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பாலம் அருகே உள்ள சுனாங்காட்டைச் சேர்ந்த சந்திரன் (68) என்பவர் வாணி விலாசினி பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.30 மணியளவில் வாக்களித்து விட்டு வெளியே வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். 

உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கோழிக்கோடு நகர வாக்குச்சாவடி எண் 16-ஐ சேர்ந்த இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) பூத் ஏஜெண்டான அனீஸ் அகமது (66) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் சில நிமிடங்களுக்கு தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டது.

ஆலப்புழா தொகுதியின் காக்காஜோம் சுசாந்த் பவனில் வசிக்கும் சோமராஜன் (70) என்ற முதியவர் ஆலப்புழாவில் உள்ள அம்பலப்புழாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வரிசையில் நின்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த ஆசிரியர் சித்திக் (63) என்பவர் நிறைமருதூர் அருகே உள்ள வல்லிக்கஞ்சிரம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து