முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Keerthy Suresh- Maneka-2024-04-26

திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். ஒரே மாதிரியான வடிவத்தில் ஆட்சியிருந்தால்  நன்றாக இருக்காது. திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று  அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.

புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை. இது வரை பா.ஜ.க. கேரளாவில் வந்ததில்லை என்றும், இந்த முறை பா.ஜ.க. வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். 

மேலும் இந்த முறை பா.ஜ.க.வினர் கண்டிப்பாக கேரளாவில் தனது ஆட்சியை பிடிப்பார்கள். கண்டிப்பாக திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சுரேஷ் கோபி கண்டிப்பாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து