எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை - திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை ரஜினி மன்றத்தினர் நடத்தி அன்னதானம் வழங்குகிறார்கள்.
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள் விழா இன்று 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மதுரையில் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் கோவில்களில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். நலத்திட்ட உதவிகளையும், அன்னதானம், ரத்ததானமும் வழங்கி ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
இது குறித்து மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் எஸ்.எம். ரபீக், ஏ. பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைமை மன்றத்தின் சார்பில் மதுரையில் உள்ள கோவில்கள்,பள்ளிவாசல், தேவாலயங்களில் விசேஷ பூஜை மற்றும் வேட்டி, சேலை, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்படுகிறது. மதுரை நகரில் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் சுரேஷ் தலைமையில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. கீரைத்துறையில் தங்கவேல் தலைமையில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது. தாளமுத்து, வெள்ளைசாமி, பில்லா கார்த்திக், மனோ பாட்சா தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. வாசன் கண் மருத்துவமனை, பல் மருத்துவமனையுடன் இணைந்து தாடி செல்வம் தலைமையில் இலவச கண் சிகிச்சை, பல் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பைக்காரா முதியோர் காப்பகம், ஆரப்பாளையம் பிள்ளையார் தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் விருமாண்டி தலைமையில் அறுசுவையுடன் கூடிய பிரியாணி வழங்கப்படுகிறது. சோழவந்தான் பகுதியில் கண்ணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதே போல் மதுரை நகரில் வார்டுகள் வாரியாக இலவச வேட்டி, சேலைகள், அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.எம். ரபீக், ஏ. பாண்டியன், வழக்கறிஞர் சிங்கராசு, பாலதம்புராஜ், சேகர், மணவாளன், துரை, ஆர்.எம். மெய்யப்பன், அழகர், பழனிபாட்சா, விஜயபாஸ்கர், மகேஷ்பாபு, சுரேஷ், நாகேஸ்வரன், காமாட்சி, தீபன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் பாலதம்புராஜ், வி.கே.ஆர். சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாநகர் மாவட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், பெரியார் பஸ் நிலையம் ஆர்.எம்.எஸ். சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளும், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும் நடக்கிறது. ஏழை பெண்களுக்கு இலவச சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகிறது. கோ. புதூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. திடீர்நகர், பெரியார் பஸ் நிலையம், மேலவாசல், விளாச்சேரி, பேச்சியம்மன் படித்துறை, நகைக்கடை பஜார், எல்லீஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் கண்ணா, புதூர் காளிமுத்து, முருகன், சந்திரன், பஞ்சு, கண்ணன், ஆத்திகுளம் ஜெகன், பர்மா முருகன், மேலவாசல் வைரம், வாடிப்பட்டி முருகதாஸ், எல்லீஸ் நகர் கண்ணன், நாகராஜ், பாண்டிகுமார், ரஜினிகணேசன், வேலு, அபுதாகீர், பாலாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான இன்று லிங்கா திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்த நாள் விழா மக்கள் பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத