எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நாட்டின் 66வது குடியரசு தின விழா நேற்று தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக் கொடி ஏற்றினார். கண்கவர் அணிவகுப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா பார்த்து பிரமித்துப் போனார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் டெல்லி வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று காலை 9.30 மணிக்கு குடியரசு தின விழா தொடங்கியது. 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் வந்தார். அங்குள்ள அமர்ஜோதி ஜவான் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை வந்தார். அவரை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி தனது மனைவியுடன் வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். தலைவர்கள் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதையில் குண்டு துளைக்காத சுற்றிலும் கண்ணாடியால் ஆன சிறப்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
9.55 மணிக்கு அதிபர் ஒபாமா மனைவி மிச்செலுடன் காரில் வந்து இறங்கினார். அவரை பிரதமர் மோடி வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றார். அப்போது லேசாக மழை பெய்ததால் ஒபாமாவுக்கு ரெயின்கோட் அணிவிக்கப்பட்டது. சரியாக 10 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜபாதை வந்தார். அவரது காரின் இருபுறமும் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து அழைத்து வந்தனர். விழா மேடை அருகே கார் நின்றதும் ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். அதிபர் ஒபாமாவும் சென்று ஜனாதிபதியை கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள் உயரதிகாரிகளை ஒபாமாவுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். தேசிய கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது.
முதலில் ராணுவத்தில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்ரா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் தியாகம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ்குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முகுந்த் வரதராஜனுக்கான அசோக் சக்ரா விருதை அவரது மனைவி முதலாவதாக மேடைக்கு வந்து ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நீராஜ் குமாரின் மனைவி விருதை பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆயுத படையின் முதன்மை தளபதி ஆகியோர் வணக்கம் செலுத்தி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பின் போது நமது ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்களின் மாதிரிகள் இடம் பெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் பி - 81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மர் போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு பெண் அதிகாரிகள் தலைமையேற்று நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த குழுவினர் அணிவகுத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து 1,200 சிறுவர், சிறுமிகளின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. தீரச்செயல் புரிந்ததற்காக தேர்வு செய்யப்பட்ட 20 சிறுவர் சிறுமிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர். அணிவகுப்புகளும், கலைநிகழ்ச்சிகளும் 2 மணி நேரம் நடைபெற்றது. அதை ஒபாமா, பிரணாப் முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்தவாறு கண்டுகளித்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தது. அவற்றை பிரதமர் மோடி அவ்வப்போது ஒபாமாவுக்கு எடுத்து கூறி விளக்கமளித்தார். ஒவ்வொரு அலங்கார ஊர்தியும் வந்த போது அவர் எழுந்து நின்று கை அசைத்து உற்சாகப்படுத்தினார். விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டார். பா.ஜனதா தலைவர் அமீத்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் க லந்து கொண்டனர். டெல்லியில் மழை பெய்ததால் முக்கிய பிரமுகர்கள் பலர் குடை பிடித்தபடி அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் பாரம்பரியப்படி சுதர் தலைப்பாகையும், கோட்சூட்டும் அணிந்து இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் தலையில் கம்பளியாலான தொப்பி அணிந்து இருந்தார். சரியாக 12 மணிக்கு தேசிய கீதம் இசைக்க குடியரசு தின விழா நிறைவு பெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினர் ஒபாமாவிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடை பெற்று சென்றார். அவரை குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து ஜனாதிபதி மாளிகைக்குன அழைத்து சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி