முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் பக்தர்களுக்கு 4 கூடுதல் லட்டுகள் வழங்க முடிவு

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி திருமலையில் நாளை முதல், பக்தர்களுக்கு கூடுதலாக 4 லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 10 விலையில் 2 லட்டுகள் வழங்கப் படுகின்றன. திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை பக்தர்களுக்கு ரூ. 10 விலையில் 2 லட்டுகளும், 1 இலவச லட்டும் வழங்கப்படுகிறது. ரூ. 50 சுதர் சன டிக்கெட் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 
கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 25 விலையில் 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இது சமீப காலமாக 2 ஆக குறைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அறிந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், வரும் திங்கள்கிழமை முதல், தலா 4 கூடுதல் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து