எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி: நிலநடுக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய நேபாள எல்லைகளை ஓட்டியுள்ள மாநிலங்களிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதில் பீகாரை நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. பீகாரிலும் 7.9 ரிக்டர் அளவுக்கு பாதிப்பு உணரப்பட்டதாக தெரிகிறது. இதனால் பீகாரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பீகாரில் இறந்தவர்களின் எண்ணிகை 42ஆக அதிகரித்தது.64பேர் காயம் அடைந்தார்கள்.
பீகாரில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நிலைமைகள் குறித்து நிதிஷிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நில நடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு தினங்களுக்கு பிஎஸ்என் எல் தனது சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல் உத்திரப்பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு மாநிலங்களில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியன் ரயில்வே நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நிலநடுக்கம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேபாளத்தில் தவித்து வரும் பெண்கள் கால்பந்து குழுவினரை மீட்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் இந்தியாவைச் சேர்நஅத கால்பந்து குழு பெண்கள் 18 பேரை மீட்க கவனம் செலுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதில் இதில் நேற்று முன் தினம் 11.13 மணிக்கும், பின்னர் நேற்று அதிகாலை 4.46 மணிக்கும் உணரப்பட்டது. இLு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் கடந்த முறையைப் போன்று சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இருந்த போதிலும் மீண்டும் தோன்றிய நில அதிர்வு காரணமாக வட மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மையத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் நேற்று பிற்பகலில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 237 பேர் படுகாங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை முதல்வர் அகிலேஷ் முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இதற்காக 10 லாரிகள் மூலமாக தண்ணீர், உணவு பொட்டலங்கள், 10 லாரிகளில் பிஸ்கெட்டுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் விரைந்து சென்று நிவாரண பணிகளை விரைவுபடுத்தவும் அகிலேஷ் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அவசர உதவி அழைப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் ,ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக் கை 13 ஆக அதிகரித்தது.நேற்று 8 வயது சிறுமி பலியானாள்.இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை அந்தமாநிலத்தில் அதிகரித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி