எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில்தான் வித்திடப்பட்டது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் 3 சதவீத பணிகள்தான் நடைபெற்றது என்றும் அதிமுக ஆட்சியில்தான் 73 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டன என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை மாநகரத்தில் மெட்ரோ இரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை சென்னை நகர மக்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே தான், மெட்ரோ இரயில் சேவையை விரைந்து வழங்கியமைக்கு எனக்கும், எனது அரசுக்கும், சென்னை நகர மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாத திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இந்த சென்னை மெட்ரோ இரயில் திட்டமே முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எனது தலைமையிலானஅதிமுக அரசு கால தாமதம் ஏற்படுத்தியது என்றும் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் குறித்து தெரிவித்த பதிவுகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. கருணாநிதி, 30.6.2015 அன்று வெளியிட்டு உள்ள அறிக்கையிலும், இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டது என்றும், கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மக்களை குழப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தவறான தகவல்களை தொடர்ந்து தி.மு.க தலைவர் கருணாநிதி, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்து வருவதால், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் பற்றிய பல்வேறு உண்மைகளை தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறேன். சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆய்வின் அடிப்படையில் தான், வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் - பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித்தடம் என இரு வழித்தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது தான் வரலாறு.
இதிலிருந்தே, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு வித்திட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். மெட்ரோ இரயில் என்பது தரைக்கு அடியில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகவே உலகெங்கும் உள்ளது. சென்னையில் பல இடங்களில் தெருக்கள் குறுகலாகவும், வீடுகள் நெருக்கமாகவும் உள்ளதாலும்; பல இடங்களில் பழமை வாய்ந்த வீடுகள் உள்ளதாலும்; தரைமட்டத்திற்கு கீழ் சுரங்கப்பணிகள் மேற்கொள்வது கடினமானதாகவும், காலதாமதம் ஏற்படுவதாகவும் அமையும் என்பதால், மெட்ரோ ரெயிலுக்கு பதில் ‘மோனோ’ ரெயில் விரைந்து முடிக்க இயலும் என்பதாலும் தான், சென்னையில் மெட்ரோ ரெயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு 2004-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உத்தரவு வழங்கியிருந்தாலும், விரைந்து செயல்படுத்தக் கூடிய தரைக்கு மேல் மட்டத்தில் நிறுவப்படும் ‘மோனோ’ ரெயிலே சிறந்ததாக இருக்கும் என 2005 ஆம் ஆண்டு எனது அரசால் முடிவெடுக்கப்பட்டது.
இதையே உறுதி செய்யும் வகையிலே தான், 2007 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, திட்ட அறிக்கையை தயாரித்த டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம், அனைத்து வழித்தடங்களும் தரைக்கு மேல் மட்டத்தில் இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. எனினும், பல்வேறு காரணங்களினால் மெட்ரோ ரெயில் திட்டத்தின் சுமார் 53 சதவீத பகுதி தரைக்கு அடியிலும்; 47 சதவீத பகுதி தரை மட்டத்திலும், உயர் மட்டத்திலும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தினை விரைந்து செயல்படுத்தும் அதே வேளையில், மெட்ரோ ரெயில் செயல்படுத்த இயலாத பகுதிகளில் மோனோ ரெயில் திட்டத்தினை செயல்படுத்த நாங்கள் முடிவெடுத்து, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் என்பது முந்தைய திமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதும், திமுக ஆட்சியில் இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டது என்பதும் வடிகட்டிய பொய்கள் தான். நான் ஏற்கெனவே தெரிவித்தப்படி, இத்திட்டத்திற்கு வித்திட்டதே எனது தலைமையிலான முந்தைய அரசு தான். திட்ட வடிவமைப்பிற்கு நாங்கள் தெரிந்தெடுத்த ஆலோசகரான டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தான் இந்தத் திட்டத்தையும் வடிவமைத்தது.
2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமைக்கப்பட்டதும், 24.6.2006 அன்று சட்டப்பேரவையில் தமிழக கவர்னர் ஆற்றிய உரையிலேயே, சென்னை மாநகருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் 30.6.2006 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மெட்ரோ ரெயில் மூலம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பதால் மோனோ ரெயில் திட்டம் கைவிடப்பட்டு, மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் விரிவான வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பின்னர், இதற்கான ஒப்புதல் 7.11.2007 அன்று தான் முந்தைய திமுக அரசால் வழங்கப்பட்டது. முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கெல்லாம் ஆதரவு அளித்து, அந்தக் கூட்டணி அரசுக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றி வந்த திமுகவால், இத்திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதலை 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பெற முடிந்தது.
மேலும், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மெட்ரோ றுரயில் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முந்தைய திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் தான், அதாவது 15.2.2011 அன்று தான் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய தொகையைக் கூட உரிய காலத்தில் முந்தைய திமுக அரசால் பெற இயலவில்லை.
26.8.2010 அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணை அமைச்சர் சௌகத் ராய், “தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும், அதனால் 2010-11ஆம் ஆண்டுக்கு மத்திய அரசால் 652 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்தும் அந்த நிதி விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடமிருந்து உரிய காலத்தில் மத்திய அரசின் பங்கை திமுக அரசு பெறாத காரணத்தால், பல கோடி ரூபாய் இழப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சென்னை மெட்ரோ றுரயில் திட்டத்திற்காக, 2006 முதல் 2011 வரையிலான முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செலவிடப்பட்ட தொகை வெறும் 1,143 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை, இந்தத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 9,229 கோடி ரூபாய் ஆகும். இதுவரை முடிந்துள்ள 76 விழுக்காடு பணிகளில், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 3 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், எனது ஆட்சிக் காலத்தில் தான் 73 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, அதன் பணிகள் குறித்த காலத்தில் முடிந்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 59 சதவீதம் அளவிற்கு கடன் வழங்குகிறது. இந்தக் கடனையும் பெற தான் ஜப்பானுக்கு சென்று ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதலை பெற்றதாக மற்றொரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் ஜப்பான் சென்றது 6.2.2008 அன்று தான். ஆனால் 23.4.2007 அன்றே சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை ஜேஐசிஏ-விற்கான கடன் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது.
மேலும், 23.5.2007 நாளிட்ட கடிதத்தின்படி, 2007-2009 ஆண்டுகளுக்கான ஜேஐசிஏ சுழல் திட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் சேர்க்கப்பட்டு விட்டது. இதன் அடிப்படையில் ஜேஐசிஏ நிறுவனம் ஜுன் 2008ல் கடன் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,