முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவாஜி கணேசனை குறுகிய வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம் காங்கிரஸ் உறுப்பினருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணிக்கு  முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை சட்டபேரவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வரவேற்றனர். இதனை வரவேற்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் என்று கூறினார்.

இதற்கு சட்டபேரவையில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர்  ஜெயலலிதா இடைமறித்து பேசுகையில் , நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் இந்த  நாட்டுக்கே சொந்த மானவர் . இன்னும் சொல்லபோனால், உலகம் முழுவதும் உள் தமிழர்களுக்கு, , தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கு சொந்தமானவர். ஆகவே, அவரைஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்