எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - திருச்சி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் 55 காவல்துறை குடியிருப்புகள் உள்பட தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறைத்துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய உறுதுணையாக, கடமை உணர்வுடன் பணியாற்றும் காவலர்களின் நலன்களை பேணிக்காத்திடும் வகையில், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களின் அருகிலேயே குடியிருப்புகள் கட்டுதல், காவல்துறையினருக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 55 காவல்துறை குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் மற்றும் குருவிக்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 410 குடியிருப்புகள்; வேலூர் மாவட்டம் - வேலூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 96 குடியிருப்புகள்; தேனி மாவட்டம் போடி நகரத்தில் கட்டப்பட்டுள்ள 76 குடியிருப்புகள்; சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி, அன்னதானப்பட்டி மற்றும் மல்லூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 107 குடியிருப்புகள்;
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 51 குடியிருப்புகள்; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்டப்பட்டுள்ள 50 குடியிருப்புகள்; பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 30 குடியிருப்புகள்; காஞ்சிபுரம் மாவட்டம் ஊனமாஞ்சேரி மற்றும் உத்திரமேரூரில் கட்டப்பட்டுள்ள 37 குடியிருப்புகள்; திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் கட்டப்பட்டுள்ள 22 குடியிருப்புகள்; சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலம் மற்றும் தேவக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள 20 குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கட்டப்பட்டுள்ள 16 குடியிருப்புகள்; கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கட்டப்பட்டுள்ள 19 குடியிருப்புகள்; நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் கட்டப்பட்டுள்ள 13 குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள 11 குடியிருப்புகள் என 83 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 958 காவல் துறை குடியிருப்புகளையும் முதல்வர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் பொதத்தூர் பேட்டை; கடலூர் மாவட்டம் ஆலடி, புவனகிரி மற்றும் கடலூர் புதுநகர்; விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், தியாகதுர்கம் விழுப்புரம் மேற்கு, பகன்டைகுட்டுச்சாலை, பிரம்மதேசம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு; திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மற்றும் செங்கம்; ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல்; திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி மற்றும் தாண்டிக்குடி; திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், குருவிக்குளம், விஜயநாராயணம் மற்றும் திருக்குரான்குடி; கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் பந்தய சாலை; சேலம் மாவட்டம் தம்மம்பட்டி; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை; நீலகிரி மாவட்டம் காந்தல், சோளூர்மட்டம், வெலிங்டன் மற்றும் குன்னூர்; தேனி மாவட்டம் அல்லிநகரம் மற்றும் தென்கரை;
ஈரோடு மாவட்டம் அரசலூர்; மதுரை மாவட்டம் மதிச்சியம் ஆகிய இடங்களில் 18 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 33 காவல் நிலையங்கள்; விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை; மதுரை மாவட்டம் மதுரை; திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி; நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் காந்தல் ஆகிய இடங்களில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை எழும்பூரில் 500 காவலர்களுக்கான தங்குமிடம்; புதுப்பேட்டையில் ஆயுதப்படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம், அண்ணா சதுக்கத்தில் கடலோரக் காவல் நிலையம், 20 கடலோரக் காவல்படையினருக்கான தங்குமிடம் மற்றும் அசோக் நகரில் காவல் பயிற்சியாளர்கள் பயிற்சி மையம்; நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் ஆயுதப்படை நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் 20 கடலோரக் காவல்படையினருக்கான தங்குமிடம், தரங்கம்பாடி மற்றும் புதுப்பட்டினத்தில் கடலோரக் காவல் நிலையங்கள்; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் ஆயுதப்படை நிர்வாக அலுவலகக் கட்டடம்;
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவலர்களுக்கான பாசறை, ராமேஸ்வரத்தில் சிறப்புக் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம், கமுதியில் திருப்பி நிலையம், ஆற்றங்கரை மற்றும் வாலிநோக்கம் ஆகிய இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள்; தருமபுரி மாவட்டம் தருமபுரியில் 50 காவலர்களுக்கான பயிற்சி அறை; திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளியில் காவலர் சமூகநலக் கூடம் மற்றும் 200 காவலர்களுக்கான தங்குமிடங்கள்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் சோதனைச் சாவடி; கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் காவல் துணைக்கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு; காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 100 காவலர்களுக்கான தங்குமிடம்; மதுரை மாவட்டம் மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளர் குடியிருப்பு; சிவகங்கை மாவட்ட ஆயுதப் படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம்; அரியலூர் மாவட்டம் அரியலூரில் ஊர்க் காவல்படை அலுவலகக் கட்டடம்; தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம்; என 27 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 இதர காவல்துறை கட்டடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் குடியிருப்புகள்; சிறைத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகம்; கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மத்தியசிறை வளாகம்; திருச்சிராப்பள்ளி மத்தியசிறை வளாகம்; கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகம்; ஆகிய இடங்களில் 11 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 சிறைத்துறையினருக்கான அலுவலர் குடியிருப்புகள் என மொத்தம் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு தலைமைச் செயலாளர் .கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர். அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர். அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும், சிறைத்துறைத் தலைவருமான . எஸ். ஜார்ஜ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான . ஆர்.சி. குடாவ்லா, தமிழ்நாடு காலவர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . முகமது ஷகில் அக்தர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.