முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்ஷிக்கு அமைச்சர்கள்-டெண்டுல்கர்- அபினவ் வாழ்த்து

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி :  ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு மத்திய அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் (58கிலோ எடை பிரிவு) வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

இந்தியாவிற்கு பதக்கம் வென்று சாதனை படைத்த அந்த ஹரியானா வீராங்கனைக்கு  நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நகர்புற மேம்பாட்டுத்துறை வெங்கய்யா நாயுடு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேனகா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணை அமைச்சர் ராஜ்ய வர்த்தன் ராத்தோர், டெல்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால்,ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேப்போன்று,விளையாட்டு வீரர்கள் டெண்டுல்கர், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், துப்பாக்கிச்சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் வாரியம்,ஆகியோர் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷிக்கு தங்களது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கானும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்