முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு பணம் வாங்கி ஏமாற்றி விட்டனர்: பைனான்சியர் போத்ரா புகார்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, எஸ்.ஆர்.எம் நிறுவனர் பச்சமுத்துவை கைது செய்தால், காணாமல்போன மதனைப் பற்றி உண்மை நிலவரம் தெரியவரும் என பைனான்சியர் போத்ரா தெரிவித்துள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்தார் பைனான்சியர் போத்ரா கூறுகையில், எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து மீது சராமாரியான குற்றச்சாட்டுக்களை கூறினார். காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் மதன் கிடைக்காத நிலையில், பச்சமுத்துவை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரிய வரும் என போத்ரா தெரிவித்தார்.

தங்கள் நிதி நிறுவனம் மூலம் பச்சமுத்து முன்னிலையில், மதன் "மொட்ட சிவா, கெட்ட சிவா" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகக் கூறினார். மூன்று மாதங்களில் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக உறுதி பத்திரத்தில் கையெழுத்துயிட்டனர். ஆனால், இதுவரை அந்த பணம் தனக்கு கிடைக்கவில்லை என பைனான்சியர் போத்ரா குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் பச்சமுத்துவும் ஈடுபட்டுள்ளதால் அவரை கைது செய்யக்கோரி காவல் துறை ஆணையரிடம் தாம் மனு அளித்துள்ளதாகவும், பச்சமுத்துவை விசாரிக்கும்பட்சத்தில் உண்மை நிலவரம் வெளிவரும் எனவும் அப்போது போத்ரா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்