எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பாண்டியராஜனுக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய மாற்றங்களை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக க.பாண்டியராஜன் நியமிக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரோசய்யா, பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பதவியேற்றார். நேற்று மாலை நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவிற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆளுநர் ரோசய்யா வரவேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.35 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா தொடங்கியது.
தலைமை செயலாளர் அனைவரையும் வரவேற்று பதவியேற்பு விழாவை அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் ரோசய்யா, புதிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர் பாண்டியராஜன், ஆண்டவன் பெயரால் பதவியேற்பு உறுதிமொழி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் அனைவருடனும் முதலமைச்சர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவில் தலைமை செயலாளர் ராமமோகனராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அமைச்சர்கள், ஒ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பாண்டியராஜனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சராக பதவியேற்ற பாண்டியராஜன் நேற்று மாலையே தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் பாண்டியராஜன் வாழ்க்கை குறிப்பு - கடந்து வந்த பாதை: புதிய அமைச்சராக பதவியேற்ற பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார். பாண்டியராஜன் குடும்பத்தினருடன் ஆவடியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
விளாம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட பாண்டியராஜன், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டே பள்ளிப் படிப்பை முடித்த பாண்டியராஜன், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றார். இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் எம்.பி.ஏ. படித்துமுடித்த அவர், மேற்குவங்கத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் சேர்ந்தார்.
அந்த அனுபவத்தைக் கொண்டு சென்னையில் கடந்த 1992-ல் மாஃபா (Mofoi) எனும் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன்பின்னர்தான் பாண்டியராஜனாக இருந்த அவர், மாஃபா பாண்டியராஜனாக அறியப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ள அனுபவத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல நாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெற முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட பாண்டியராஜன், பின் தே.மு.தி.க.வில் இணைந்தார். பின் அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டுடன் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-வாக இருந்து வந்தார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாண்டியராஜன், அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதையடுத்து ஆவடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்ற பாண்டியராஜன், மக்களின் குறைகளைக் கேட்டறிய டெக்னாலஜியின் துணைகொண்டு ’மை ஆவடி ஆப்’ (My Avadi App) எனும் செல்போன் செயலியை உருவாக்கி பிரபலம் ஆனார். தேர்தலில் வென்ற மாஃபா, பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அ.தி.மு.க தலைமையின் நன்மதிப்பைப் பெற்றார். குறிப்பாக தி.மு.க உறுப்பினர் தியாகராஜனின் ஆங்கில உரைக்கு, அவர் பாணியிலேயே பதிலளித்து அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பிரபலமானார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.