எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதி அந்தங்கடந்த பரம்பொருளான இறைவனை உலக உயிர்கள் இன்புற்று உய்ய உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமானை அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய சமய குரவர்கள் போற்றி துதித்துள்ளனர். அவ்வாறு மூவராலும் பாடப்பெற்ற ஈடு இணையற்ற திருத்தலங்களில் ஒன்று தான் திருச்சி மாவட்டத்தில் உள்ள (லால்குடி) திருத்தவத்துறை (எ) லால்குடி திருத்தலமாகும். இது திருச்சி-சிதம்பரம் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது.
திருத்தலம்
திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெருந்திரு பிராட்டியார் பிள்ளைத்தமிழ் என்ற தனிச் சிறப்பான பிள்ளைத்தமிழ் இத்திருக்கோவிலின் அம்பிகை மீது பாடியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போலவே இந்த தலமும், சைவமும், வைணவமும் கலந்த திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் எம்பெருமான் சப்தரிஷீஸ்வரர் மேற்கே பார்த்தும், பெருந்திருபிராட்டியார் கிழக்கே பார்த்தும், திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி மெய்யன்பர்க்கு அருள்மழை பொழிகின்றனர். தில்லை நடராஜர் பெருமானுக்கு இணையாக சிவகாமி உடனுறை ஆனந்த நடராஜ பெருமானுக்கும் திருவாதிரை பெருவிழா காண்பதும் இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு.
இத்திருக்கோவில் ஊரின் நடுவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலில் நுழைவு வாயிலில் ஐந்து அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே முன்புறம் நாற்கால் மண்டபம் உள்ளது. சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியும் உள்ளது. கோபுர வாசலில் நுழைந்ததும், வலப்புறத்தில் சிவகங்கை தீர்த்தக்குளமும் இடப்புறத்தில் வசந்த மண்டபமும் உள்ளது.
திருத்தவத்துறை லால்குடியான வரலாறு
அப்பர் சுவாமிகள் அருளிய பண்டெழுவர் “தவத்துறை” என்ற சொற்றொடரில் உள்ள தவத்துறை என்பதே இத்தருத்தலத்திற்கு பெயராக முன்னோர்களால் மொழியப்பட்டது. பின்னே வந்த சான்றோர்களால் ‘திரு’ சேர்க்கப்பட்டு திருத்தவத்துறை என்றே பல்லாண்டுகளாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் வரலாற்றுக்கீறல் காரணமாக திருத்தவத்துறை என்று திருநாமம் வலுவிழந்து விட்டது.
மாலிக்காஃபூர் மன்னர்
மாலிக்காஃபூர் மன்னர் தமிழகத்தில் படையெடுத்தபோது திருத்தவத்துறையை நெருங்கிய நேரத்தில் தூரத்தே இருந்து ஒரு கோபுரத்தை காண நேர்ந்தது. அச்சமயம் சப்தரீஷீஸ்வரர் திருக்கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு வேலைகள் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாலிக்காஃபூரின் கண்களுக்கு சிவப்பு கோபுரமாகத் தெரிந்திருக்கிறது.
உடனே அருகில் இருந்தவர்களிடம் அது என்ன லால்குடி- என்று உருது சொற்றொடரை உச்சரித்துக கேட்டிருக்கிறார். ‘லால்’ என்றால் சிவப்பு என்றும், ‘குடி’ என்றால் கோபுரம் என்றும் பொருள். அவர் அவ்வாறு வினவிய அச்சொற்றொடரே இன்றளவும் நின்று கால கட்டத்தில் திருத்தவத்துறை என்றால் பலருக்குத் தெரியாது. ஆனால் தமிழக அறநிலையத்துறை ஆவணங்களில் ‘திருத்தவத்துறை’ என்றும் பெயர் இன்றளவும் இடம் பெற்று வருகிறது. அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் கோவில் என்றும் பெயர் வந்தது.
தோஷங்கள் நீங்கும்
சப்தரிஷிகளின் நேர்வழி வந்த கிரகங்கள்-3 (சந்திரன், குரு, சுக்கிரன்) இரண்டாம் தலைமுறை கிரகங்கள்-2 (சூரியன், புதன்) மூன்றாம் தலைமுறை கிரகங்கள்-3 (சனி, ராகு, கேது) தலைமுறைக்கு பின் வந்த கிரகம்-1 (செவ்வாய்)
எனவே நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள், தோஷங்கள் அனைத்தும் சப்தரிஷிகளால் வணங்கப்பெற்று அவர்கள் தன்னுள் ஆட்கொண்ட இத்தலத்து எம்பெருமான் ஸ்ரீசப்தரிஷீஸ்வரரை தொழுதால் நீங்கும். இத்தலத்து நவக்கிரகங்கள் வைத்தீக பிரதிஷ்டை ஆகம பிரதிஷ்டை மற்றும் சமப்பிரதிஷ்டைக்கும் உட்படாமல் தனித்துவமாக அனைத்தும் சூரியனை நோக்கி அக்தர் மண்டபத்தில் அமைந்துள்ளதால் நவக்கிரக தோஷங்கள் இங்கு வழிபட நீங்கும்.
ஸ்ரீ நடராஜபெருமான் மகாஅபிஷேகம்
இத்திருக்கோவிலின் திருவாதிரை பெருவிழா ஆண்டுதோறும் 10 தினங்கள் மிக சிறப்பாக நடைபெறும். திருவிழாவில் முக்கியமானது திருவாதிரைப் பெருவிழா. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் அலங்காரத்துடன் நாள்தோறும் நடன மண்டபத்தில் இறைவன் நடனகாட்சி நடைபெறும். திருவாதிரை நன்னாளுக்கு முன் இரவு நடராசப் பெருமானுக்கு மிகப்பெரிய அளவில் மங்கல இசையுடன் திருமுழுக்காட்டு (மகாபிஷேகம்) 108 வாசனை திரவியங்களுடன் நடைபெறும். சிதம்பரத்திற்கு அடுத்து திருத்தவத்துறை (எ) லால்குடியில் தான் திருவாதிரை வெகுசிறப்பாக நடைபெறும்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த மகாஅபிஷேக விழாவில் கலந்து கொண்டு நடராஜபெருமானின் அபிஷேகத்தையும், ஆனந்த நடனத்தையும் கண்டு களிப்பார்கள். மறுநாள் அதிகாலை சூரிய உதயத்தின்போது தீபாராதனையும், மாலை ஆனந்த தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெறும், மறுநாள் விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.