எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-தமிழகத்தில் ஆட்சியமைத்திட அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
கவர்னர் அழைப்பு:
தமிழக சட்டமன்ற அ.தி.மு.க தலைவராக கடந்த 5ம் தேதி அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த 7ம் தேதி அவரை முன்மொழிந்த முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனிடையே பொதுச் செயலாளருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அவர் கவர்னர் வித்யாசாகர்ராவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.இந்நிலையில் நேற்று காலை கவர்னரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து கவர்னர் மாளிகைக்கு சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைத்திடுமாறு கவர்னர் வித்யாசாகர்ராவ் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நகர,ஒன்றிய அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்:
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைத்திட எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரது வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.திருமங்கலம் நகர் தேவர் திடலில் மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.தமிழச்செல்வம்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் நகர் மன்றத் தலைவர் மு.சி.சோ.சி.நிரஞ்சன் ஆகியோரது தலைமையில் திரண்ட நகர,ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.அப்போது நகர் நிர்வாகிகள் கு.வைரவன்,ராஜாமணி,கவிராஜன்,சிங்கராஜபாண்டியன்,ரமேஷ்,பிரபு,கரிகாலன்,இன்பம்,மூர்த்தி,அக்னிவேலு,பாலமுருகன்,வழக்கறிஞர்கள் சம்பத்,சஞ்சய்காந்தி,முத்துராஜா, வெங்கடேஷ்,பாண்டியராஜ்,ஒன்றிய நிர்வாகிகள் உரப்பனூர் சாமிநாதன்,அன்னகொடி, காராளம்,ரவி,பாண்டி,மாரி, இளங்கோவன்,பிச்சைமணி,முனியாண்டி,முருகன்,கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
அம்மா பேரவை கொண்டாட்டம்:
இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைத்திட அ.தி.மு.க சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் நகர் தேவர்திடலில் திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன் தலைமையில் திரண்ட அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழந்தனர்.அப்போது அவ்வழியே வந்த பேருந்துகளை நிறுத்தி அதில் பயணம் செய்த பொதுமக்களுக்கு சாத்தங்குடி தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினார்.முன்னாள் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் சௌடார்பட்டி பாண்டியன்,ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,கட்சி நிர்வாகிகள் சிவன்ராஜன்,அலப்பலச்சேரி முருகன்,சிவஜோதிதர்மர், பிச்சைமணி, கோடீஸ்வரன், ஆறுமுகம்,விருமாண்டி, முத்துராமன்,சிவசக்தி, பாலசுப்பிரமணியன்,அழகர்சாமி,சிவன்காளை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
-
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.