எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிழக்கு
கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான
அரசு நலத்திட்ட உதவிகள் ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இவ்விழாவில் கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் 147 நபர்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாவும், 14 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும், 2 பயனாளி;களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மரக்கன்றுகளும், 6 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000 வீதம் வைப்புத் தொகையாக 6 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஆக மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
அம்மா அவர்களின் அரசு ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டுமென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். குறிப்பாக விலையில்லா கறவைப் பசு, விலையில்லா ஆடு, சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடன், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, நல்ல சுகாதாரம் ஆகியவை நாட்டு மக்களுக்கு வழங்குவது நல்ல அரசின் கடமையாகும். எந்த ஒரு மனிதனும் உணவில்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கொண்டு வந்தது அம்மா அவர்களின் அரசு தான். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா வாழ்ந்தார்கள். அம்மா அவர்களின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்து வழியில் வந்த அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அம்மா 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த திட்டமாகும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். பெண்கள் கல்வி கற்றால் சமுதாயத்திற்கு நாட்டிற்கும் பேருதவியாக இருக்கும் என்பதை அறிந்து பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மடிக்கணினி தி;ட்டத்தின் மூலம் கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய மாணவியர்கள் தங்களுடைய மடிக்கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள உதவியாக உள்ளது. கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக வர வேண்டுமென்பதற்காக கல்வித்துறைக்கு வருடத்திற்கு 24000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
கிராமப்புற மாணவ மாணவியர்கள் நலன் கருதி, நீட்ஸ் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுத்தது அம்மா தான். அம்மா வழியில் வந்த இந்த அரசு கடை கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்கள் நன்கு படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் சிறந்த மருத்துவர்களாகவும், சிறந்த வழக்கறிஞர்களாகவும், உயர் அதிகாரியாகவும், நல்ல குடிமகனாகவும், வர வேண்டும். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரைதிருஞனாம், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ம.சேகர், தலைமையாசிரியர் என்.சேகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சுப்புலெட்சுமி, பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.