எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டைச் சதம் எடுக்க, சஹா சதத்தை அடிக்க, ஜடேஜாவின் அதிரடி அரைசதத்துடன் இந்தியா 4-ம் நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியாவின் வார்னர், லயன் விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்து கடும் சிக்கலில் உள்ளது.
அவுட்
4-ம் நாளான நேற்று இந்திய அணி 360/6 என்று தொடங்கியது, இதில் புஜாரா 130 ரன்களுடனும் சஹா 18 ரன்களுடனும் களமிறங்கினர். கடைசியில் புஜாரா 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்து லயன் பந்தில் மேக்ஸ்வெலிடம் ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விருத்திமான் சஹா 233 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஓகீப் பந்தில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
புஜாராவும், சஹாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்தனர். இதில் சஹாவின் ஸ்ட்ரைக் ரேட் டெஸ்ட் இன்னிங்ஸுக்கான சரிவிகிதத்தில் இருந்தது, அதாவது 50.21சதவீதம் இது சஹாவின் ஒரு மிக முக்கியமான, அருமையான சதம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் புஜாரா சாதனையான 525 பந்துகள் நின்றார். 38.47 சதவீதம் தான் ஸ்ட்ரைக் ரேட். இரட்டைச் சதத்துக்கு நிச்சயம் கூடுதலாக 50-60 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டுள்ளார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா இறங்கி 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 603 ரன்களுக்கு இந்தியா 210 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. ஓவருக்கு 2.87 ரன்கள்தான், ஆனால் மிக முக்கியமான, தொடரை முடிவு செய்யும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மிகவும் உழைத்து வீசி 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். ஓகீப் 77 ஓவர்களில் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், சிக்கனமாக வீசினார். நேதன் லயன் 46 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 163 ரன்களுக்கு 1 விக்கெட்.
புஜாராவின் சாதனை:
இந்திய வீரர்களிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிகபந்துகளைச் சந்தித்தவர் என்ற பெருமையை எட்டினார் புஜாரா, அவர் இந்த இன்னிங்ஸில் மொத்தம் 525 பந்துகளை சந்தித்தார். இதுதான் ஒரு இந்திய வீரர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச பந்துகளைச் சந்தித்தத நிகழ்வாகும்.
இவருக்கு அடுத்த படியாக ராகுல் திராவிட் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 270 ரன்களை எடுத்த போது 495 பந்துகளை சந்தித்திருந்தார், இது தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. 491 பந்துகளை எதிர்கொண்டு நவ்ஜோத் சித்து (201) 3-ம் இடத்திலும் 477 பந்துகளை எதிர்கொண்டு ரவிசாஸ்திரி (206) 4-ம் இடத்திலும் 472 பந்துகளை எதிர்கொண்டு சுனில் கவாஸ்கர் (172) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
152 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸை ஆடியது. வார்னர் விக்கெட்டை ஜடேஜா பவுல்டு முறையில் வீழ்த்தினார், ஆப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய அளவில் திரும்பிய பந்து வார்னர் தடுப்பைக் கடந்து ஆப் ஸ்டம்ப்பை பெயர்த்தது. இரவுக்காவலனாக நேதன் லயன் இறங்கினார். அவர் 2 ரன்கள் எடுத்து ஜடேஜா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்து ஒன்று திரும்ப, மட்டையைக் கடந்து சென்ற பந்து ஸ்டம்பைத் தாக்கியது.
முன்னதாக டி.ஆர்.எஸ். உதவியினால் தப்பி ஆஸி. பந்து வீச்சை வறுத்தெடுத்த புஜாரா, சஹா!
ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் புஜாரா, சஹாவின் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.இருவரும் அபாரமாக ஆடி 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்துள்ளனர். தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.