எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே....சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் ஜஅட்டமாசித்தி யுபதேசித்த படலம்ஸநடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.ஆலமரத்தைத் தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சிக் கோயிலைப் போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தி பட்டமங்கலத்தில் எழுந்தருளிய வரலாற்றைப் பார்ப்போம்
திருக்கையிலையில் ஒரு கல்லால மரத்தின் கீழே சிவபெருமான் அன்பும் அருளும் நிறைந்த போக தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அம்பிகை இருந்து கொண்டிருந்தார்.சுற்றிலும் நின்ற சிவகணத் தலைவர்களுக்கும் சனகர், சனத்குமாரர் முதலிய நால்வர்க்கும் நல்லுரைகள் வழங்கிக்கொண்டிருந்தார். அந்தப் புனிதமான சூழ்நிலையில் கார்த்திகைப் பெண்களாகிய யக்ஷமாதர்கள் ஜஅம்பா, துலா, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி ஸஅறுவரும் சிவச்சின்னங்கள் துலங்கிட அங்கு வந்தனர்.முருகனுக்குப் பாலூட்டியவர்கள் அவர்கள்.சிவபெருமானின் அருகில் பணிந்து நின்று, பின்னர் திருவடியை வணங்கினர். "கருணைக்கடலே! எங்கள் பிதாவே! நாங்கள் எளியவர்கள். எங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்து அருளவேண்டும்", என்று வேண்டிக்கொண்டனர்.
சிவபெருமான் தம்முடைய இடப்பக்கத்தில் இருந்த அம்பிகையைச் சுட்டிக்காட்டினார். "உமா தேவியே பராசக்தி. மஹேஸ்வரி. அணிமா முதலிய அஷ்டமாசித்திகளும் பணிப்பெண்களாகத் தன்னைச் சுற்றிலும் இருந்து எப்போதும் குற்றேவல் புரிந்து கொண்டிருக்க வீற்றிருப்பவள். ஆகையால் நீங்கள் அம்பிகையை உங்கள் உள்ளங்களில் இருத்தித் தியானம் செய்யவேண்டும். அப்படியானால் அவள் உங்கள் வினைகளை நீக்கி, உங்களை அஷ்டமாசித்திகளுக்குப் பாத்திரர்களாக ஆக்கி,அவளே அந்த சித்திகளை உங்களுக்குக் கொடுத்தருள்வாள்", என்றார்.
பிறகு அவர் அவர்களுக்கு அந்த சித்திகளை உபதேசித்தார். ஆனால் அந்த அறுவருமே அம்பிகையைத் தியானம் புரியாது விட்டுவிட்டனர். ஆகையால் உபதேசம் அவர்களுக்கு அறவே மறந்துபோயிற்று.இதனால் கோபமுற்ற சிவபெருமான், அவர்களைப் பட்ட மங்கை என்னும் தலத்தில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் கற்பாறைகளாகக் கிடக்கும்படி சபித்துவிட்டார். அவர்கள் சாபவிமோசனம் கேட்டனர். ஆயிரம் ஆண்டுகள் அவ்வாறு பாறைகளாகக் கிடந்தபின்னர் தாமே மதுரையிலிருந்து அங்கே வந்து அவர்களின் சாபத்தைப் போக்கி,அவர்களுக்குப் பழைய வடிவத்தையும் தந்து, அத்துடன் அஷ்டமா சித்திகளையும் விளக்கிக் காட்டுவதாகச் சொன்னார். அவ்வண்ணமே அந்த அறுவரும் பட்டமங்கையின் ஆலமரத்தடியில் பாறைகளாகக் கிடந்தனர்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து மதுரை சொக்கநாதப்பெருமான் ஞானாசிரிய வடிவம்ஜதட்சிணாமூர்த்திஸ தரித்து பட்டமங்கையில் அந்த அறுவர் கிடக்கும் இடத்தில் தோன்றினார். அவர்களுடைய வினைகள் கெட்டு, சாபவிமோசனமாகுமாறு திருக்கண் பார்வையால் அருளினார். பாறை வடிவம் நீங்கப்பெற்ற அறுவரும் பக்தியுடன் சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்தனர்.
கார்த்திகைப் பெண்களுக்கு சிவனருள் கிடைக்கப்பெற்ற தலம்தான் பட்டமங்கலம். இங்கே ஈசன் தட்சிணாமூர்த்தி பகவானாக அருள் தரிசனம் தருகிறார். பொதுவாக, எல்லாக் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இத்தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து, இம்மை மறுமை பயனை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார். இவ்வாறு ஐயன் கிழக்கு நோக்கி தரிசனம் தருவதை திருவிளையாடல் புராணமும் குறிப்பிடுகிறது. இந்த தட்சிணாமூர்த்தி பகவானின் காலடியில் பிரம்மாவை அன்னபட்சி வடிவிலும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம்.
தலவிருட்சமான ஆலமரம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி பகவான் சந்நதி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். இந்த தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். திருமணத் தடைகளால் தவிக்கும் கன்னியர் இந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, வழிபட தடைகள் நீங்கி, விரைவிலேயே திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இம்மரத்தில் தொட்டில் கட்டினால், மழலைச் செல்வம் கிடைக்கப்பெறுவார்கள். குழந்தைகள் நாக்கில் சரஸ்வதி மந்திரத்தை எழுதி, தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வரச்செய்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. உண்டியலே இல்லாத, அர்ச்சனை, தரிசனம் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம்.
இல்லாத வித்தியாசமான கோயில் இது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது இத்தலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.