எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 அடி உயரத்தில்
இலங்கையின் வெல்லவேத் நகரத்தை சேர்ந்தவர் அப்துல் (வயது 29). இவர் தனது மனைவி நசுரா (21), தாயார் லிஸ்பியா (54), சகோதரர் அர்ஷத் (34) ஆகியோருடன் கடந்த 26-ந் தேதி சென்னைக்கு சுற்றுலா வந்தார். பாரிமுனை மண்ணடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்கள், சென்னை மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.ஒவ்வொரு முறை வெளியே சென்றபோதும் அப்துல், ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ளார். அனைவரும் காரிலேயே சென்று வந்தனர். இந்த நிலையில், அவர்களின் சென்னை சுற்றுப்பயணம் நிறைவடைந்து வரும் 3-ந் தேதி மீண்டும் இலங்கை திரும்ப வேண்டியிருந்தது. இதனால், சுற்றுலாவின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், பொருட்கள் வாங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை தியாகராயநகர் சென்று பொருட்கள் வாங்க திட்டமிட்டனர்.
அங்கு செல்வதற்காக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில், அப்துல் காரை முன்பதிவு செய்தார். காரில் அப்துல், அவரது மனைவி நசுரா, தாயார் லிஸ்பியா, சகோதரர் அர்ஷத் ஆகியோர் தியாகராயநகர் சென்றனர். பல்வேறு கடைகளில் பொருட்கள் வாங்கிய அவர்கள் மாலை 3.30 மணிக்கு அங்கிருந்து மீண்டும் மண்ணடியில் உள்ள தங்கும் விடுதிக்கு திரும்பினர்.அவர்கள் வந்த காரை பூந்தமல்லி அருகேயுள்ள புளியம்பேடு கிராமத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் (35) ஓட்டிவந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகள் வெறிச்சோடி இருந்ததால், முத்தீஸ்வரன் காரை சற்று வேகமாக ஓட்டிவந்ததாக தெரிகிறது. மாலை 4.15 மணியளவில், கார் பாரிமுனை ராஜாஜி சாலையில் ஐகோர்ட்டு அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சுரங்கப்பாதைக்குள் வேகமாக பாய்ந்தது. சினிமா படத்தில் வரும் காட்சியை போல் நடந்த இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த நேரத்தில் சுரங்கப்பாதையிலும் குறைவான வாகனங்களே சென்றதால், மேலே இருந்து சீறிப்பாய்ந்த கார், எந்த வாகனத்தின் மீதும் விழவில்லை. ஆனால், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், காரை ஓட்டிய டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தார். அதுவரை, சாலையில் சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு அருகில் உள்ள சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்தனர். ஆம்புலன்ஸ் வேன் வந்ததும், 5 பேரும் மீட்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நசுராவுக்கு மட்டும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர் உள்பட மற்ற 4 பேருக்கும் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, யானைகவுனி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னைக்கு குதூகலமாக சுற்றுலா வந்த இலங்கை பயணிகளுக்கு இந்த விபத்து பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்