எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களின் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி கடந்த 17.05.2017 அன்று துவங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்த ஜமாபந்தியின் நிறைவு நாள் நேற்று 23ம் தேதி வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
வருவாய் தீர்வாயம்
வருவாய் தீர்வாயம் என்பது வருவாய் துறையின் கணக்குப் பதிவேடுகளை பார்வையிட்டு உறுதி செய்யப்பட்டு அதே வேலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் சில மனுக்களுக்கு பரிசீலனைக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அவ்வாறு வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களில் ஜமாபந்தி கடந்த 17.05.2017 அன்று துவங்கப்பட்டு நேற்று வரை நடத்தப்பட்டு வந்தது. இந்த வருவாய் தீர்வாய நாளில் வரப்பெற்ற மொத்த மனுக்களின் எண்ணிக்கை 534 மனுக்கள். இவற்றில் 104 மனுக்களின் மீது விசாரனை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 430 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வேலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு ஏரி, குளம், குட்டைகளிலிருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏணையவை இலவசமாக எடுக்க 27.05.2017 வரை மனுக்கள் அளித்து அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம். இந்த மண் வகைகளை கொண்டு விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களின் தரத்தினை மேம்படுத்தவும், மண் வளத்தை பெருக்கி கொள்ளவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாத திட்டமாகும். இத்திட்டத்தினை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்படுத்தி தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பேர்ணாம்பட்டு ஏரியை பராமரித்து கல் வைத்து கட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வூரில் உள்ள ஒரே ஒரு ஏரியினை முறையாக பராமரித்தால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் தீரும்
ரூ.40 லட்சம
நிலத்தடி நீரின் மட்டமும் உயரும். மேலும் பேர்ணாம்பட்டு வட்டம் வளத்தூரில் உள்ள 19 கிராமங்களை குடியாத்தம் வட்டத்திற்கு மாற்றிட கோரப்பட்டுள்ளது. பத்தளப்பள்ளி அணை கட்டுமாணப் பணிகள் சில இடையூறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து தேவையான உத்தரவுகளை பெற வழிவகை செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கும். மேலும் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்திற்கு புதுப்பிக்க குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் ஒதுக்கியுள்ளார்கள். அதே போல் இந்த பகுதியில் உள்ள செல்வந்தர்கள் தங்களின் பங்களிப்பாக ஒரு நிதியினை சேகரித்து இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த்துறையி சார்பில் 48 நபர்களுக்கு ரூ.2,89,000- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 56 நபர்களுக்கு ரூ.6,72,000- மதிப்பில் முதியோர் உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,400- மதிப்பிலான சலவை பெட்டியும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.66,650- மதிப்பிலான விவசாய கருவிகள் மற்றும் விதைகள் ஆக மொத்தம் 110 நபர்களுக்கு ரூ.10 இலட்சத்து 33 ஆயிரத்து 50- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க நிலவள வங்கித் தலைவர் சீனிவாசன், வட்டாட்சியர் பத்மநாபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பேர்ணாம்பட்டு) அப்துல் கரீம், கலைச்செல்வி, (குடியாத்தம்) ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவின் இறுதியில் வட்டாட்சியர் சரவணன் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நன்றியுரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.