எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது.
முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.12,81,000 - மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களையும், பல்வேறு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ.3,12,000 - மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.32,258 - மதிப்பிலான இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.20,000 - மதிப்பிலான வீரிய தக்காளி நாற்றுக்களையும், வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.9,828 - மா நெருக்கு ஒட்டு கன்றுகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386 - வீதம் ரூ.3,772 - மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.16,61,858 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்த்திட்டத்தின் சார்பில் அங்கன்வாடிகளில் பயின்ற 12 குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களையும், 21 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு இரண்டு பெண் குழந்தைகள் சான்றிதழினையும், 7 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பயன்களை வழங்கி தெரிவிக்கையில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் பயன்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் இருக்குமிடங்களுக்கே தேடிச் சென்று நடத்தப்படும் முகாமே இந்த மக்கள் தொடர்பு முகாம். ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை போன்று தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஒரு கிராமத்திற்கு தேவையான தனிநபர் கழிப்பிட வசதி, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பொது கழிப்பிட வசதிகள் செய்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கழிப்பறைக்கு தேவையான இடவசதி இருந்தால் கழிப்பறை வசதியினை ஏற்படுத்திடவும் ரூ.12,000 - அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
சுற்றுப்புற சூழ்நிலைகளை பராமரிப்பதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை தடுத்திட முடியும். மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மரக்கன்று பண்ணைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் அனைத்து கிராமப்புறங்களிலுள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் மரக்கன்று நடவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதினை தவிர்த்திட வேண்டும்..தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், நிலையான வருவாயினை ஏற்படுத்திடவும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளே தனியாக பயிற்சி அளித்து வங்கிக்கடனாக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்தில் கடனுதவியும் அளித்து வருகிறது. புதிய தொழில் புரிய விருப்பமுள்ளவர்கள் சந்தையில் பொருளுக்கான தேவை என்ன, பொருளின் முக்கியத்துவம் அறிந்து அதன் விற்பனை இடங்கள், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து குறைந்த செலவில் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை கணக்கிட்டு தொழில் தொடங்கிட வேண்டும். தமிழக அரசு பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது.
மனிதன் வாழ்வதற்கு தேவையான உணவு உற்பத்தியினை பெருக்கிட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத அரசு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத அரசு மானியமும் வழங்கி வருகிறது. தமிழக அரசு பல்வேறு சான்றிதழ்கள் இ.சேவை மையங்கள் மூலம் வழங்கிட உத்தரவிடப்பட்டு, பொதுமக்கள் தேவையான இருப்பிட, வருமான், ஜாதி, போன்ற பல்வே சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மூர்த்தி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி மகளிர் திட்ட அலுவலர் கல்யாண சுந்தரம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் தி.இரா.ஆனந்தி தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தி.அபிதாஹனீப் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன் உதவி இயக்குநர் (கனிமம்) சாம்பசிவம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர் ச்சித்திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தி.கிருஷ்ணவேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசக்கண்ணன் வட்டாட்சியர்கள் தி.ராணி தி.நஜிமுனிசா அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்