எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-பாரதரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமினை அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அ.தி.மு.க நிறுவன தலைவரும்,முன்னாள் முதல்வருமாகிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் வெகுவிமரிசையாக மாநிலம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது.இதையொட்டு வரும் 30ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகிலுள்ள அம்மா திடலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.வைரமுத்து, இணை இயக்குனர் டாக்டர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பூமிநாதன் வரவேற்று பேசினார்.
திரளான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இரத்ததானம் செய்த இந்த இரத்ததான முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்கள்.முதலாவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகமே வியந்திடும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மதுரையில் மாபெரும் விழா நடைபெறவுள்ளது.எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிட அம்மாவின் வழியில் வந்த நாங்கள் எம்.ஜி.ஆரின் புகழ்பாட எங்களின் உயிரினையும் தந்திடுவோம்.தற்போது மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.எம்.ஜி.ஆரின் நுற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது அ.தி.மு.க அரசு இருக்கவேண்டும் என்ற அம்மாவின் லட்சியம் நிறைவேறியுள்ளது.ஆனால் அம்மா மறைந்து விட்டார்கள்.ஆனால் தாயின் ஆசியுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.மக்களுக்கா பல்வேறு பணிகளை நாள்தோறும் செய்து வரும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டும் தான்.விரைவில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்பட்டு அதன் புகழும் கட்டிடங்களும் விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கும் என்று பேசினார்.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில் 200 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளின் சுகாதார பிரிவிற்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கபட்டு வருகின்றனர்.இருப்பினும் 145 படுக்கை வசதி கொண்ட திருமங்கலம் அரசு மருத்துமனைக்கு அவுட்சோர்சிங் முறையில் சுகாதார பிரிவிற்கு பணியாளர்களை நியமித்திட உடனடியாக உத்தர விடப்படும்.அதே போல் எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவர்கள் நியமனம்,அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின்அனுமதி பெற்று அறிவிக்கப்படும்.மதுரையில் எந்த காரியம் தொடங்கினாலும் அம்மாவின் நல்லாசியுடன் அது வெற்றி பெறும் என்பது நிச்சயம்.அதே போன்று மதுரையில் துவங்கவுள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் வரலாற்றை புரட்டிப் போடுகிறன்ற அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்திடும்.
தற்போது சென்னை மருத்துவத்தின் தலைநகராக உள்ளது.மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை கொண்டு வந்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக மதுரையில் 150கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதே போல் தென்மாவட்ட மக்கள் பயன்பெற்றிடும் வகையில் 50கோடி செலவில் அதிநவீன மகப்பேறு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜெய்கா திட்டத்தின் கீழ் 1634கோடி மதிப்பீட்டில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை,மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் அதிநவீன படுத்தப்படவுள்ளது.மதுரை அரசு மருத்துவமனையில் 350கோடி செலவில் 16ஆப்பரேசன் தியேட்டர்கள்,1எம்.ஆர்.ஐ,1சி.டி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சர்வதேச மருத்துவ தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட வுள்ளது.தற்போது மதுரைக்கு மட்டும் 550கோடிமதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் அரசினால் செய்து தரப்பட்டு வருகிறது.இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றிடும் போது தென்மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்திடும். இவற்றுக்கெல்லாம் மேலாக 5 தென்மாநிலங்களுக்கு மத்தியில் 203கோடி மதிப்பீட்டில் மெட்ரோ பிளட் பேங்க் எனும் மாபெரும் ரத்தவங்கி சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மகிழச்சியுடன் திருமங்கலம் நகரில் வைத்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
முன்னதாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.இவ்விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,வக்கீல்ரமேஷ்,திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைதலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.