எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இத்திருத்தலமானது நாமக்கல்லிலிருந்து சுமார் 31 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் 500 வருடங்கள் பழமைவாய்ந்தது. இத்திருத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், உற்சவர் சோமாஸ்கந்தர், அம்மன் தாயார் அறம் வளர்த்த நாயகி ஆவார். மேலும் இத்தல பெருமைகள் பற்றி அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார். இத்தலத்தில் நெல்லி விருட்சமரமாக உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் லிங்கத்தின் மேல் அம்பு பட்ட தலும்பு ஒன்று இருப்பது சிறம்பம்சமாகும். இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையை தலைநகரமாகக் கொண்டு வல்வில் ஒரி என்னும் மன்னன் இராசிபுரம் பகுதிகளையும் ஆட்சி செய்து கொண்டு வந்தான். வல்வில் ஒரி ஒரு சிவபக்தன். வில்வித்தையிலும் சிறந்த வீரம். இராசிபுரம் பகுதியில் வேட்டைக்கு வந்த மன்னனுக்கு வனத்தில் ஒரு மிருகம் கூட கண்ணுக்கு தென்படவில்லை. அலைந்து சோர்ந்து போன நேரத்தில் ஓரிடத்தில் வென்பன்றி ஒன்றைக் கண்டான். உடனே அப்பன்றியை தூரத்திக் கொண்டு அதன் மீது அம்பை எய்தான். எய்த அம்பு பன்றியின் மேல் தாக்கியும் பன்றி நிற்காமல் ஓடியது. மன்னன் பன்றியை வெகுதூரம் பின் தொடர்ந்தான். நீண்டதூரம் ஓடி பன்றி ஓரிடத்தில் ஒரு புதருக்குள் ஓடி மறைந்து விட்டது. மன்னன் புதரை விலக்கி பார்த்தபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கமாக தோன்றிய ஒரு லிங்கத்தைக் கண்டான். மன்னன் எய்த அம்பு பட்டு லிங்கத்தின் நெற்றியில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். மன்னனுக்கு சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். உடனே மன்னன் சுயம்புலிங்கம் தோன்றிய இடத்திலேயே சிவபெருமானுக்கு கோவில் எழுப்பத் தொடங்கினான். வல்வில் ஒரி மன்னனுக்கு பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தடியில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் மன்னன் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சியளிக்கிறார். ஆடிப் பெருக்கன்று இக்கோவிலைக் கட்டிய வல்வில் ஒரி மன்னனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. பொங்கல், சுண்டல், நைவேத்யம் செய்து விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன.
இத்தல விநாயகர் சகட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். கைலாசநாதர் தலத்தின் பிரகார வலத்தை முதலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில்இராமேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. காசி, இராமேஸ்வரம் தலங்களில் எழுந்தருளும் சிவனை இத்தலத்தில் தரிசிக்கும் விதமாக விஸ்வநாதர் சன்னதி விமானம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமானதாகும்.
மேலும் இத்தலத்தில் அம்பாள் சன்னதி அருகில் முருகன் பாலதண்டாயுதபாணியாகவும், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் முருகப்பெருமானின் இரண்டு கோலங்களையும் நாம் தரிசிக்கலாம்.
பொதுவாக சிவராத்திரியின் போது சிவனுக்கு இரவில் நான்கு கால பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்கின்றார்கள். அம்பாள் அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். நாயகிக்கு முன்புறம் மகாமேரு அமைந்துள்ளது. மேலும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர் எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷம். இவரை வணங்கிவிட்டே கோயி லுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கையாக காட்சி தருகிறாள். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சிவதுர்க்கைக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தெட்சிணாமூர்த்திக்கு தனியே உற்சவர் இருக்கிறார். இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஹோமங்கள் நடக்கின்றன. அந்நேரத்தில் இவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை பிரசாதமாக தருகின்றார்கள்.
நாகருக்கு இத்தலத்தில் தனிச் சன்னதி உள்ளது. நாகதோஷமுள்ளவர்கள், தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கையுள்ளது. காலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, ஏகாதச ருத்ரபாராயணம் நடைபெறுகின்றது. 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது. மேலும் பஞ்சலிங்கம், கஜலெட்சுமி, சரஸ்வதி, நாயன்மார்கள், நால்வர், ஐயப்பன் மற்றும் சந்தான குறவர்களும் உள்ளனர்.
அறம் வளர்த்த நாயகி சன்னதியில் வளர்பிறை பிரதோஷத்தின் போது உச்சிக்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விசேஷ வழிபாடு நடக்கின்றது. அப்போது தேங்காய், பழம், அரிசி மற்றும் உப்பில்லாத சாதம் முதலானவற்றை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றார்கள். இவ்வாறு செய்வதால் புத்திரப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
இந்த கோவில் பிரகாரத்தில் கங்கை தீர்த்தம் தானாக தோன்றியதாக சொல்கிறார்கள். சிவஅம்சமான வீரபத்திரருக்கு சன்னதி மற்றும் இவருக்கு எதிரே நந்தி அமைந்துள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பமாக சகட விநாயகர் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் இவரை வணங்கிட கல்வியில் சிறப்பிடலாம் என்பது நம்பிக்கை.
கைலாசநாதரிடம் வேண்டிக் கொண்டால் கலைகளில் சிறப்பிடம் பெறலாம். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள். சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசியில் விசாகம், தையில் தைப்பூசம், மாசியில் மாசிமகம், பங்குனியில் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.