எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எட்டு அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ டி-20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த ஆண்டு ...
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ் நாடு பிரிமீயர் ‘லீக்’ (டி.என்.பி.எல்.) டி-20 போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்தப்போட்டி சிறந்த களமாக அமைந்தது.
8 அணிகள் ...
2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 20-ந்தேதி வரை இந்தப்போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் நடைபெறும் டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
‘பிளேஆப்’ முறை
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஐ.பி.எல். போட்டி போலவே ‘பிளேஆப்’ முறை தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
ஆகஸ்ட் 20-ல் இறுதி
‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் விளையாடும். இந்த ஆட்டம் சென்னையில் ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும். எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 4-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இந்த ஆட்டம் ஆகஸ்ட் 16-ந்தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் ‘குவாலிபையர்1’-ல் தோல்வி அடையும் அணியும், எலிமினேட்டரில் வெல்லும் அணியும் மோதும். இந்த ஆட்டம் நெல்லையில் ஆகஸ்ட் 18-ந்தேதி நடைபெறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
முதல் போட்டி
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- அஸ்வின் வெங்கட்ராமன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே திறமை வாய்ந்த அணி என்பதால் தொடக்க ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எதிர்பார்ப்பு
ஆர்.சதீஷ், கோபிநாத், தலைவன் சற்குணம், சாய் கிஷோர், அந்தோணி தாஸ், சரவணன் ஆகிய சிறந்த வீரர்களை கொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அறிமுக டி.என்.பி.எல். போட்டியில் 2-வதுஇடத்தை பிடித்து முத்திரை பதித்தது. எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.சுதீஷ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் புதிய வரவுகள். இதில் ராதாகிருஷ்ணன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர். இதனால் அவர் மிக அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
5-வது ஆட்டத்தில் ...
கடந்த முறை இடம் பெற்ற ரஜீல் அப்துல்ரகுமான், நிர்மல்குமார், வாசுதேன், ஷிபி ஜவகர் ஆகிய 4 வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் 24-ந்தேதி நெல்லையில் நடக்கிறது. 2-வது ஆட்டத்தில் கோவை கிங்சையும் (29-ந்தேதி, சென்னை), 3-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்டியாட்சையும் (ஆகஸ்ட் 1-ந்தேதி, நெல்லை), 4-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையையும் (ஆகஸ்ட் 4-ந்தேதி, சென்னை), 5-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெய்ன்ட்டையும் (ஆகஸ்ட் 6-ந்தேதி, சென்னை), 6-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சையும் (ஆகஸ்ட் 9-ந்தேதி, திண்டுக்கல்), கடைசி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சையும் (ஆகஸ்ட் 13-ந்தேதி, திண்டுக்கல்) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எதிர்கொள்கிறது.
நேரடியாக ஒளிபரப்பு
நிவேதன் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், திரிலோக்நாத், ஹிகர் ஹீகடு, தீபன், மோகித் ஹரிகரன் ஆகாஷ் போன்ற இளம் வீரர்கள் இந்த டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக ஆடுகிறார்கள். டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய பிறகு தமிழக அணி தியோதர் டிராபி, விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றினார்கள். மேலும் ரஞ்சி டிராபியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் இன்றைய தொடரும் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியை வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்தப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் விஜய் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.