எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்லேகலே: இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தவான் சதம் மற்றும் ராகுல் அரை சதத்தால் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் நேற்று துவங்கியது. இதிலும் இந்திய அணிதான் 'டாஸ்' வென்றது. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, வழக்கம்போலவே, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா வீரர்கள்
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரகானே, அஷ்வின், சகா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ்,முகம்மது சமி, உமேஷ் யாதவ்,
இலங்கை வீரர்கள்
உபுல் தரங்கா, திமுத் கருணரத்னே, குசல் மென்டிஸ், தினேஷ் சண்டிமால், ஏஞ்சலே மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, டில்ருவன் பெரேரா, மலிண்டா புஷ்பகுமரா, லக்ஷன் சண்டகன்,விஷ்வ பெர்னோண்டா, லகிரு குமாரா.
குல்தீப் யாதவ்
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சஸ்பெண்டு காரணமாக விளையாட முடியாத ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். அவருக்கு இது 2-வது டெஸ்ட் ஆகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்டில் விளையாடினார். இதில் 4 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
இலங்கை அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹெராத், நவன்பிரதீப், தனஞ்செயா டிசில்வா ஆகியோருக்கு பதிலாக லக்கு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, லக்சன் சன்டகன் இடம் பெற்றனர்.
தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல்நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 67 ரன்களும், ஷிகார் தவான் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ரன்களை குவித்துள்ளது.
சாதனை படைத்த கே.எல்.ராகுல்
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. முதலில் களமிறங்கிய ராகுல், தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் ரன்கள் குவித்தனர். ராகுல் 67 பந்துகளில் தனது 9ஆவது அரைசதத்தை அடித்தார். அதுமட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த எவர்டான் வீக்ஸ், ஷிவநாரன் சந்தர்பால், ஜிம்பாவே அணியை சேர்ந்த ஆண்டி ஃப்ளவர், இலங்கை அணியை சேர்ந்த குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதத்தைப் அடித்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார் கே.எல்.ராகுல்.
இதையடுத்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் 135 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்களை எடுத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்து: கேரளாவில் சிறுவன் உள்பட 5 பேர் பலி
30 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியானார்கள்.
-
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர்
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.