எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று பல்கலைக்கழக லெ.சித.லெ. பழநியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இக்கருத்தரங்தைத் துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், தமிழ் பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடக்கமே இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நோக்கமாகும் .மொழி இனத்தின் அடையாளம். ஓர் இனத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தெரிந்து கொள்வதற்கு மொழி அவசியம். அத்தகைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கில் தான் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் தமிழ் பண்பாட்டு காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மோழியை பணம் சம்பாதிக்கும் கருவியாக கருதக்கூடாது. தாய்மொழி ஒரு கருவியல்ல. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்கத் தொடங்கும் போது, அவர்களுக்கு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், விழுமியங்களையும் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். எனவே, பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து இக்கருத்தரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் திரு. அன்பரசு இராஜேந்திரன், தமது சிறப்புரையில், அழகப்பாபல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அழகப்பர் அருங்காட்சியகமும், பண்பாட்டு காட்சியகமும் மிகச் சிறந்தமரபுடைமை நிலையம் எனப் பாராட்டினார். மேலும், நாம் நமது வேர்களை மறந்து விடக்கூடாது. உலகமயமாதல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது போல நமது வாழ்க்கையும் சுருங்கிவிட்டது. நாம் நமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பகிர்ந்துக் கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மொழியை வாழும் மொழியாககற்பிக்கவேண்டும். நம் மொழியை இலகுவாகவும்,பயன்படுத்தும்;விதமாகவும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் மொழியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் செயலை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழிநிலைய பாடத்துறைத் தலைவர் முனைவர் இரா. விமலன் தமது வாழ்த்துரையில், நம் முன்னோர்கள் நமது பண்பாட்டைகாரண காரியத்தோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆதனை உணர்ந்து அவற்றை பின்பற்ற வேண்டும். கணினிசார்ந்த பயணத்தை நாம் மேற்கொண்டால் தான் நாம் நம் மொழியை வளர்க்க முடியும். தொழில்நுட்பத்தோடு நாம் நம் மொழியை கைகோர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேனாள் சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர். தங்கம் மூர்த்தி, தமது வாழ்த்துரையில், தமிழ் மொழிபாரம்பரியம்மிக்க மொழி. ஆதை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஒருவருக்கு தாயும், தமிழ் ஆசிரியரும் சிறப்பாக அமைந்து விட்டால், அதுவே அவருக்கு பெரிய வரமாகும். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியை அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் சிறப்பாக செய்து வருகிறது எனபாராட்டினார். 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழின் போக்கு சிறப்பாக அமைந்தால் தான் தமிழ் வளர்ச்சி பெறும் என்றார்.
சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழிநிலைய ஆசிரியர் முனைவர் கோ. சந்தன்ராஜ் மற்றும் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் திரு. சு. நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்க ஆய்வுக்கோவையை திரு. அன்பரசு இராஜேந்திரன் அவர்கள் வெளியிட துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன், வரவேற்புரையாற்றினார். தமிழ்ப் பண்பாட்டுமைய இயக்குநர் பேரா. சே. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.