எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறுவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுவதையொட்டி சேலம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மாவட்ட முழுவதும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தொடங்கி வைத்து செய்தியாளயர்களிடம் தெரிவித்ததாவது.
மக்கள் இயக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் பருவமழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்கால அடிப்படையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏ.டி.எஸ் கொசுக்கள் வளரும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியினை தீவிரப்படுத்தும் விதமாக தற்பொழுது ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 கிராம ஊராட்சிகளிலும், டெங்கு தடுப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போர்கால அடிப்டையில் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஏ.டி.எஸ் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக 1,788 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் 124 மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 2,696 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1,789 சத்துணவு மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள 398 துணை சுகாதார நிலையங்கள், 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 21 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மற்றும் 152 தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்திடவும், போதிய மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்திடவும், மருத்துவமனை வளாகங்களில் கொசு உற்பத்தியாகாத வண்ணம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய நிலவேம்பு கசாயத்தினை பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ஓமலூர் பேருந்து நிலையம், ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட்சி சவுரியூர், மேட்டூர் என இன்று ஒருநாளில் மட்டும் மாவட்ட முழுவதும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் , ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் நேற்றைய தினம் (04.10.2017) மட்டும் சங்ககிரியில் 105.3 மி.மீ, வாழப்பாடி 102.3 மி.மீ, தம்மம்பட்டி 90.6 மி.மீ, கெங்கவல்லி 90.4 மி.மீ, ஓமலூர் 89.0 மி.மீ, ஏற்காடு 87.4 மி.மீ, எடப்பாடி 78.2 மி.மீ, சேலம் 60.0 மி.மீ, காடையாம்பட்டி 58.4 மி.மீ, பெத்தநாயக்கன்பாளையம் 58.0 மி.மீ, வீரகனூர் 52.0 மி.மீ, ஆத்தூர் 46.6 மி.மீ, மேட்டூர் 31.2 மி.மீ, ஆணைமடுவு 30.0 மி.மீ, கரியகோவில் 5.0 மி.மீ என ஆக மொத்தம் 984.0 மி.மீட்டரும், நேற்றைய தினம் மாவட்டத்தின் மொத்த சராசரி மழையளவாக 65.6 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கும் இந்த மழைநீர் மிகுந்த பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் ஆங்காங்கு தேங்க கூடிய சுத்தமான மழை நீரில் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு தினமான ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியினை மேற்கொள்ளவும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தி, காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தினை உருவாக்கிட முன்வர வேண்டுமென இந்த தருணத்தில் அனைவரையும் கேட்டுகொள்கிறேன். மேலும் பள்ளி மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி தங்கள் வீடுகள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மரு.பூங்கொடி, ஓமலூர் வட்டாட்சியர் சித்ரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.