முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி நெல்லையப்பபுரம் மற்றும் திருநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் , ஆணையாளர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.அக்.மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.97 ஹார்விப்பட்டி நெல்லையப்பபுரம் மற்றும் வார்டு எண்.98 திருநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,  ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.  ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.97 ஹார்விப்பட்டி நெல்லையப்பபுரம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக அபேட் மருந்து தெளித்தல், கொசு புகை மருந்து பரப்புதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வாய்க்காலை சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார்.மழைநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதை தவிர்க்குமாறும், வீடுகளில் பச்சை  மற்றும் நீல நிற குப்பைத் கூடைகளை வைக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். அப்பகுதியில் ஒவ்வொரு தெருவிலும் உள்ள மழைநீர் வாய்க்காலில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் ஆயில்பால் தெளிக்கும் பணியினையும் பார்வையிட்டார். வீடுகளில் உள்ள குடிநீர் கிணற்றில் கொசு உற்பத்தியை தடுப்பதற்காக கம்போசியா மற்றும் கப்பி மீன்கள் கிணற்றில் விடப்பட்டது. அங்குள்ள ஒரு வீட்டில் சிலாப்பில் தேங்கியிருந்த தேவையில்லாத பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். வீட்டின் மாடிகளில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளை மூடி வைக்குமாறு கூறினார். அப்பகுதியில் ஒரு வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வீட்டினையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்த காரணத்தினால் வீட்டின் முகப்பு சுவரில் கிளீன் ஹவுஸ் என எழுதி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பாராட்டு தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள குளத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியினை பார்வையிட்டார். அப்பகுதியில் பன்றிகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர் உடனடியாக பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார். அங்குள்ள மாட்டுத் தொழுவத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர்pனை நேரடியாக வாய்க்காலில் விடாமல் கழிவுநீர் தொட்டி அமைக்குமாறும் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். அங்குள்ள 1 வது தெருவில் உள்ள கடையில் ஆய்வு செய்த போது பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக ரூ.1500 அபராதம் விதித்து கடையில் உள்ள எடை இயந்திரத்தை ஆய்வு செய்தார். எடை இயந்திரம் சரியான அளவு காட்டாத காரணத்தால் உடனடியாக எடை இயந்திரத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலவேம்பு கசாயம் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆணையாளர் அவர்கள் வார்டு எண்.98 திருநகர் மருதுபாண்டியர் தெரு, விசாலாட்சி தெரு, தேவர் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருது பாண்டியர் தெருவில் ஒரு வீட்டில் கொசு புழு உற்பத்தி இருப்பதை கண்டறிந்து வீட்டின் உரிமையாளரை அழைத்து உடனடியாக தொட்டியினை சுத்தம் செய்து அப்புறப்படுத்துமாறும், அடுத்த முறை இதுபோல் இருந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். குடியிருப்போர் சங்கத்தினர் பொதுமக்களிடம் வீட்டில் பிடித்து வைத்துள்ள குடிநீரினை மூடி வைக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கூறினார். விசாலாட்சி தெருவில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு ஒரு வீட்டில் தேக்கி வைத்துள்ள தேவையில்லாத பொருட்களை பார்வையிட்டு மாலைக்குள் அப்புறப்படுத்த வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். தேவர் தெருவில் பயனற்று இருந்த சின்டெக்ஸ் தொட்டியினை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கூறினார். அங்குள்ள ஒரு வீட்டின் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி அதிகளவில் இருப்பதை கண்டறிந்து பொது சுகாதார நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் திருமதி.கௌசலாம்பிகை, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் திரு.சித்;திரவேல், திரு.முகமதுரசூல், செயற்பொறியாளர் திரு.சேகர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் திரு.சேகர், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.சுப்புராஜ், உதவிப்பொறியாளர்கள் திரு.முனீர் அகமது, திரு.முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து