எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாநகராட்சி திருநகர் மற்றும் மேல அனுப்பானடி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர். முன்னிலையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலர் மரு.இராதாகிருஷ்ணன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.98 திருநகர் பகுதியில் டெங்கு பாதித்த வீட்டிற்கு நேரடியாக சென்று வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்குமாறும், குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும் கூறினார். மேலும் திருநகர் பகுதிகளில் வெகுநாட்களாக பூட்டப்பட்டுள்ள வீடுகளில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் திறந்து சுத்தம் செய்யுமாறும், அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்யுமாறும், சுத்தம் செய்வதற்கான செலவு தொகையினை சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் வசூலுக்குமாறும் உத்தர விட்டார். ஒவ்வொரு வாரத்திலும் ஏதேனும் ஒரு நாள் முழுவதும் பூட்டியுள்ள வீடுகளிலும், காலிஇடங்களிலும் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் திருநகர் வார்டு அலுவலகம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், திருநகர் 7 வது பேருந்து நிறுத்த பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் வீடுகளை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காதவாறும், குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், அலுவலர்கள் மழைநீர் வடிகாலினை சுத்தம் செய்யுமாறும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.3 வார்டு எண்.56 மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 6ல் டெங்கு பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் பிடித்து வைத்துள்ள பிளாஸ்டிக் டிரம்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவி சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடி வைக்குமாறு கூறினார். சிந்தாமணி மெயின் ரோட்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியினை பார்வையிட்டு மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், மாநகராட்சியின் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகளை மூடி வைக்குமாறும்,தேவையில்லாத சின்டெக்ஸ் தொட்டிகளை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.
இது குறித்து அரசு சுகாதாரச் துறை செயலர் அவர்கள் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் குறிப்பாக டெங்கு காய்ச்சல் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறையும், குறிப்பாக பொதுமக்களையும் இணைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை, திருநெல்வேலி, சேலத்தில் முக்கிய சில ஒன்றியங்கள், சென்னை அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை போன்ற இடங்களில் இதன் தாக்கம் இருந்து கொண்டிருக்கும் காரணத்தினால் எப்படியாவது இந்த பகுதிகளில் நல்ல தண்ணீர் உள்ள இடங்களை கண்டறிந்து பொதுமக்களே அதனை மூடி வைப்பதற்கும், அரசு அலுவலங்களில் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை, தனியார் நிறுவனங்களில் நடவடிக்கை என இது மாதிரி கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பூட்டிய வீடுகள், பெரிய பெரிய புளு நிற டிரம்களை மூடாமல் இருப்பது, சின்டெக்ஸ் தொட்டிகள் மூடாமல் இருப்பது, கட்டிட பணிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், காலிஇடங்களில் திடக்கழிவுகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, ஷம்புகள், பிட் டேப்கள் போன்றவற்றில்தான் இந்த டெங்கு கொசு வளர்கின்றன. எனவே இவற்றை சுத்தம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று காலை நேரங்களில் கை புகை தெளிப்பான் அடிக்கும் போது வளர்ந்த கொசு புழுக்கள் அழிப்பதும், வெயில் வந்த பின்னர் டெக்னிக்கல் முறையினை பயன்படுத்தும் படியாக வழிகாட்டுதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் போது இந்த மருந்து பயனற்றதாக உள்ளது என்பதை கண்டறிந்து இந்த புதிய டெக்னிக்கல் முறையை மாற்றியுள்ளோம். அதற்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வரும்போது பொதுமக்களிடம் எங்களது அன்பான வேண்டுகோள் என்னவென்றால் டெங்கு காய்ச்சலும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல்தான். டெங்கு காய்ச்சல் வந்த ஒரு விழுக்காடு நபர்களுக்கு தட்டணுக்கள் குறைந்து நீர்ச்சத்து வெளியேறும்போது, கிருமி உள்வரும் போது டெங்கு சாட்ஸ் என்றோ, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும் காரணத்தினால் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காலம் தாழ்த்தி வர கூடாது. தமிழக அரசின் சார்பில் 837 செல் கவுண்டர்கள் ரூ.23 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. உடனுக்குடன் தட்டணுக்கள் இரத்த அணுக்கள் அளவை பார்த்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய காய்ச்சல் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று பெரியவர்களுக்கு சித்த மருத்துவ மேற்பார்வையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற அனைத்து வசதிகளையும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
இந்த ஆய்வின்போது ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. துணை ஆணையாளர் திரு.ப.மணிவண்ணன், பொது சுகாதாரத் துறை பயிற்சி நிலைய துணை இயக்குநர் செந்தில்குமார், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ், கௌசலாம்பிகை செயற் பொறியாளர்கள் சந்திர சேகரன், சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், வெங்கடசாமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.