எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகராட்சி பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப், ரெட்கிராஸ், தன்னார்வ அமைப்புகள் மூலம் 1000-க்கும் மேற்ப்பட்டவர்களை பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைத்து திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி நேற்று (29.10.2017) துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துக்கொண்டு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணியினை துவக்கி வைத்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி பகுதிகள் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இராசிபுரம், நாமக்கல் ஆகிய நகராட்சிகளை தொடர்ந்து இன்றைய தினம் திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1200-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஈடுபடுத்தப்பட்டு, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை முழுமையாக பெறவேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டினையும், சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இம்மாபெரும் தூய்மைப்பணியில் 25 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்செங்கோடு நகராட்சி முழுவதுமுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கட்டிடங்கள், சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்படுகின்றது. நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்கு லாரிகளும், சாக்கடைகள் மற்றும் நீர் போகும் பகுதிகளில் ஏதேனும் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை சரி செய்வதற்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும், தூய்மைப்பணியில் ஈடுபடும் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு நகராட்சி முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமசாமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் கோ.ரமேஷ்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர்(பொ) கே.சுகுமார், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன், திருச்செங்கோடு நகராட்சி, மருத்துவத்துறை, பொதுசுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தன்னார்வ அமைப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.