எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கத்தின் கௌரவ தலைவர் சி.சரவணன் மற்றும் நிர்வாகிகளின் முயற்சியில் இச்சங்கமும், தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு கழகமும் இணைந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4க்கான தேர்வர்களுக்கு இலவச பயிற்சி முகாமை பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைபள்ளியில் நடத்தி வருகிறது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். நேற்று இம்முகாமில் தேர்வர்களுக்கான பயிற்சி குறுந்தகடு மற்றும் கையேடுகளை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மனித வள மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். இக்கழக தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தலைமையேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தேர்வர்களுக்கு பயிற்சிக்கான குறுந்தகடுகள் மற்றும் கையேடுகளை வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும்போது புரட்சிக்கவிஞர் பாரதியார் அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல், ஆலயம் தொழுதலை விட எழுத்தறிவித்தலே சிறந்த தொண்டு என்றார். அவரின் வைர வரிகளுக்கு ஏற்ப ஒரு சிறப்பான பணியை இச்சங்கங்கள் தற்போது ஏற்படுத்தியிருக்கின்றன. அ என்பது உயிர் எழுத்து, ம் என்பது மெய் எழுத்து, மா என்பது உயிர்மெய் எழுத்து இம்மூன்றையும் சேர்த்து அம்மா என்பதில் அகிலமும் அடங்கிவிடும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் கல்வித்துறைக்காக 24 ஆயிரம் கோடியை ஒதுக்கி ஆரம்பக்கல்வி, உயர்கல்விக்காக மாணவ மாணவிகளுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி கல்வித்தாயாக திகழ்ந்தார். மேலும் தமிழகத்தை கல்வித்துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உருவாக்கினார். சாதனையாளர், வெற்றியாளர், பார்வையாளர் என மனிதனை மூன்று வகையாக பிரிக்கலாம். தன்னைத்தானே செதுக்கி கொண்டு வெற்றி பெறுபவர் சாதனையாளர். இவரை எல்லோரும் கொண்டாடுவர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது லட்சியத்தை அடைபவர் வெற்றியாளர். இவரை எல்லோரும் நேசிப்பர். மற்றவர்களை குறைகூறி கொண்டிருப்பவர்கள் பார்வையாளர். இவரை எல்லோரும் புறக்கணிப்பர். நாம் நம்மீது நம்பிக்கை வைத்து விடா முயற்சியுடன் கடின உழைப்பு மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் நம்வசமாகும் என்றார். மேலும் தானும் இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்;ந்தார். தான் படிக்கும்போது அட்லாஸ் என்னும் வரைபடங்களை வாங்க வசதி இல்லாததால், வசதி படைத்த மாணவர்களிடமிருந்து வரைபடங்களை பெற்று அதை பேப்பர் வாங்கி தலையிலிருக்கும் எண்ணையில் தடவி வரைபடங்கள் மீது வைத்து அவுட்லைன் வரைந்து படித்ததை நினைவு கூர்ந்தார். சீனபழமொழியான பசித்தவனுக்கு மீனை தருவதை விட, மீன் பிடிக்க கற்றுத்தர வேண்டும் என்பது போல உங்களின் வாழ்வாதாரம் சிறக்க ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கமும் மற்றும் திண்ணை மனிதவள மேம்பாட்டு கழகமும் இணைந்த சிறப்பான பணியை செய்து வருகின்றனர். இவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். மீண்டும் உங்களை சந்திக்கும்போது தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையில் அரசு பணி ஆற்றுபவர்களாக பார்க்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். மேலும் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுகளுக்கான நூலகத்தையும் பார்;வையிட்டார். இவ்விழாவில் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தலில் தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தது குறித்து கேட்டபோது ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர்
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.