எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகள், தன்னம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பொது வாழ்வில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்ற விதத்திலும், தங்களது திறமைகளை வளர்க்கின்ற விதத்திலும், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான கலந்துரையாடல் ‘காபி வித் கலெக்டர்’ என்ற புதுமையான நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், சிப்பிக் கூடத்தில் நடைபெற்றது.
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். மாணவ, மாணவியர்களிடம் சாலை விதிகளை கடைபிடிக்கவும், அவற்றை நண்பர்களுக்கும், அண்டை வீட்டாரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஏ.எஸ்.லாவண்யா, ஆகியோர் முன்னிலை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:நாட்டின் வளர்ச்சியில் மாணவ, மாணவியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அவர்கள் வாழும் அல்லது வசிக்கும் பகுதிகளில் உள்ள அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்காக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுவாக தங்களது பகுதிகளில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தெரியும். அத்தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என்பதும் தெரியும், ஆனால் அவற்றை பெறுவதில் உள்ள சிரமங்கள், எந்தெந்த குறைகளுக்கு அது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை, எவ்வாறு சந்திப்பது அல்லது எவ்வாறு அது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது போன்ற சந்தேகங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்வார்கள். மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கபெறும் தகவல்களை தங்களது வீடுகளில் மட்டுமல்லாது, அண்டை அயலாரிடமும் தயக்கமின்றி தெரிவிப்பது, அவர்களிடம் பொது பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம், மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை செயல்படுத்த உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் எடுக்கப்படும்.
நமது மாவட்டத்தில் பருமழையின் போது கிடைக்கப்பெறும் நீர் சேகரிப்பதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையினை தேர்ந்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட அறிவுரைகளை தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளை மேற்கொள்ள மாணவ, மாணவியர்கள் தங்களது திறமைகளையும், அறிவாற்றலையும், வாசிக்கும் வழக்கத்தையும் அதிகரிப்பதோடு, தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மைகளை அறவே நீக்கி, உங்களது தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் அடிப்படை வசதிகள், சுற்றலா பயணியர் தங்கும் விடுதி ஆகியவற்றை மேம்படுத்திடவும், சுற்றலாதலங்களுக்கு வருபவர்களுக்கு வசதியாக ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்ய ஊநவெசந- களை ஏற்படுத்தவும் மேலும், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வி சுற்றுலா சென்றுவர ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என மில்லர்புரம், தி.விக்காசா பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும் ஏ.பி.சி.வி. மகாலெட்சுமி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஆந்திர, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயற்கை மேலாண்மை என்கின்ற இயற்கை சார்ந்த திட்டத்தின் மூலம், கால்நடை வளர்ப்பினை இயற்கை விவசாயத்தில் பயன்படுத்துவது குறித்து, நமது மாவட்டதில் உள்ள விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் எனவும், இயற்கை விவசாய முறையை நமது மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சாமுவேல்புரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நமது மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றிடும் வகையில் அதிக மரங்களை நட்டு வளர்க்கவும் அவற்றை இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி வளர்க்கவும் கேட்டுக்கொண்டனர். மேலும், முள்ளக்காடு, சாண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேமிப்பு, இயற்கை விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், ஒருங்கிணைப்பாளர் வட்டாட்சியர் கே.ராஜ்குமார் தங்கசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.