எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், நாட்டிலேயே முதல்முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், ரோபோ எந்திரத்தை களம் இறக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
கேரளாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஜென்ரோபாட்டிக்ஸ் ‘தாங்கள் தயாரித்த ரோபோ எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இந்த ரோபோவுக்கு ‘பெருச்சாளி’ என பெயர் வைத்துள்ளது.
இது குறித்து கேரள நீர் ஆணையத்தின் மேலாளர் இயக்குநர் ஏ ஷைனாமோல் கூறுகையில்,
‘ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ரோபோ பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் முறைப்படி களத்தில் இறக்குகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. எங்களின் நோக்கம் உள்நாட்டு நிறுவனத்தை ஊக்கப்படுத்துவதுதான். இந்த ரோபோ தயாரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு செய்துள்ளது.
சோதனை முயற்சியாக இந்த ரோபோ எந்திரம் திருவனந்தபுரத்தில் உள்ள 5 ஆயிரம் பாதாளச் சாக்கடையில் இறக்கி சுத்தம் செய்து பார்க்கப்பட்டது. அனைத்தும் சிறப்பாக நடந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
இந்த ரோபோ எந்திரத்தை தயாரித்த ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விமல் கோவிந்த் கூறியதாவது:
9 இளைஞர்கள் கொண்ட குழுதான் இந்த ரோபோ எந்திரத்தை தயாரித்தது. இந்த ரோபோ ‘வை-பை’, ‘புளூடூத்’, மற்றும் ‘கன்ட்ரோல் பேனல்’ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும். இதில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பும், துடுப்பு போன்ற அமைப்பும், கழிவுகளை எளிதாக அள்ளி, சுத்தம் செய்யும். இந்த திட்டத்துக்கு எங்களுக்கு கேரள அரசின் நீர் வாரியம் முழுமையாக நிதி அளித்து ஆதரவு அளித்துள்ளது. குறிப்பாக சுத்தம் செய்தல், பாதாளச்சாக்கடை குழாய்களை சீரமைத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது
நாள்தோறும் கிடைக்கும் ரூ.300 முதல் ரூ.500 கூலிக்காக உயிரை பணயம் வைத்து பாதாளச்சாக்கடையில் இறங்கி விளிம்பு நிலை சமூகத்தில் உள்ள மக்கள் சுத்தம் செய்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கும், மனிதர்களே சாக்கடையை சுத்தம் செய்யும் முறையை மாற்றவும் எங்களின் கண்டுபிடிப்பு உதவும். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பாதாளச்சாக்கடையில் உள்ள 30 கிலோ கழிவுகளை இந்த ரோபா அள்ளியது. அதில் சானிட்டரி நாப்கின், துணிகள், அறுவைசிகிச்சை பிளேடுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், அடுத்த ஒருமணி நேரத்தில் இந்த ரோபா அந்த பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்து முடித்து விட்டது. எந்தவிதமான பாதாளச் சாக்கடையிலும் இதை பயன்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ராஷித் கூறுகையில், ‘பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த எந்திரத்தை இயக்க பயிற்சி அளிக்க இருக்கிறோம். இதை எளிதாகக் கையாளலாம், ‘ரிமோட் கார்’ போல் இயக்கலாம். இப்போது ஆங்கிலத்தில் கட்டளைகளைப் பிறப்பித்து இயக்குகிறோம், விரைவில் பிராந்திய மொழிகளுக்கு ஏற்ப மாற்றலாம். இந்த ரோபோவை தயாரிக்க 8 மாதங்கள் வரை தேவைப்பட்டது. ‘நுமாட்டிக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ இயக்கப்படுகிறது.
இந்த ரோபோ குறித்து அறிந்து இதேபோல் வாங்குவதற்காக தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரா அரசுகளும் எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றன. மேலும் கனடா, இங்கிலாந்து நாடுகளும் எங்களிடம் தகவல் கேட்டுள்ளன.
டெல்லியில் வரும் 22-ம் தேதி நடக்கும் ஸ்வச்பாரத் திட்டத் பயிலரங்கில் இந்த ரோபோ குறித்த செயல்விளக்கம் காட்ட அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மார்ச் 2-ம் தேதி ஆற்றுக்கால் பகவதி கோயில் பொங்கல் தினத்தின்று, இந்த பெருச்சாளி ரோபோவை முறைப்படி களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.