எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மேலும், தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2.57 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய மற்றும் பணிசுமை குறித்து ஒப்பந்தம் நிர்வாகத்திக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே நேற்று மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் சாய்க் குமார், எரிசத்தி துறை முதன்மை செயலர் விக்ரம் கபூர், தொழிலாளர் ஆணையர் பாலச்சந்தரன், இயக்குனர் நிதி மனோகரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
காலமுறை ஊதியம்
இந்த ஒப்பந்தம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 1-1.2-.2015 முதற்கொண்டு அமல்படுத்தப்படவேண்டிய ஊதிய மாற்றம் குறித்து அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பணியாளர்களுக்கு 2.57 காரணியில் ஊதிய உயர்வும் ( ஊதியம்+ தரஊதியம்) மாதமொன்றுக்கு களப்பணி உதவியாளருக்கு குறைந்த பட்ச பணப்பலன் ரூ.3,175 ஆகவும் (வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி உட்பட) அதிகபட்ச பணப்பலன் ரூ.7,775 -ஆகவும் இருக்கும். அலுவலர்களுக்கு குறைந்த பட்ச பணப்பலன் ரூ.5,800 ம் அதிகபட்ச பணப்பலனாக ரூ.27,375 ம் இருக்கும். வாரியம் 60 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும். வாரியத்தில், அனைத்து ஆரம்பநிலை பதவிகளுக்கும் பயிற்சி காலம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டு பயிற்சி காலத்திலேயே காலமுறை ஊதியம் அளிக்கப்படும். இந்த பயிற்சி காலமுறை ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வரும்.
புதிதாக 2,654 பதவிகள்
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று கூடுதலாக பல்வேறு நிலைகளில் 2,654 பதவிகள் உருவாக்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கூடுதல் செலவினமாக மாதமொன்றுக்கு ரூ.109.82 கோடியும், ஆண்டொன்றுக்கு ரூ.1,317.87 கோடிவீதம் ஏற்படும். இதன்மூலம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் சுமார் 79,100 ஊழியர்களும், 11,169 அலுவலர்களும் பயனடைவார்கள். இந்த செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும்.
கூடுதல் சலுகைகள்...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1.12.2015 ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தத்தில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகள் மற்றும் கூடுதல் செலவுகள் வருமாறு:-
அனைத்து கணக்கீட்டாளர் நிலை 2 பதவிகளும் கணக்கீட்டாளர் பதவிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், அனைத்து மஸ்தூர் பதவிகளும் களப்பணி உதவியாளர் பதவிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.80 லட்சம் கூடுதல் செலவாகும். ஓப்பந்த ஊழியர்களின் தினக்கூலி ரூ.250 - லிருந்து ரூ.380 ஆக உயர்த்தப்படுகிறது. புதிய பணிநியமனங்களின் போது அனைத்து ஆரம்ப நிலை பதவிகளுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி காலமாக 3 மாதங்கள் காலமுறை ஊதியத்துடன் பயிற்சி அளிக்கப்படும். மின்பகிர்மான வட்டங்களிலுள்ள 43 மதிப்பீட்டு அலுவலர் பதவிகள் முதுநிலை மதிப்பீட்டு அலுவலர் பதவிகளாக (கணக்கு அலுவலர் ஊதியவிகிதத்தில்) தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.8 லட்சம் கூடுதல் செலவாகும்.
ரூ.86.42 கோடி கூடுதல்...
110 கி.வா. மின் நிலையங்களில் விடுபட்ட இடங்களில் உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர் நிலை 1 பதவிகள் உருவாக்கப்படும். பகுதி நேர துப்புரவு பணியாளர்களின் ஊதியம் ரூ.1300-3000+ ரூ.300 - தர ஊதியம் உள்ள ஊதியவிகிதம் ரூ.4,100 -12,500 என்ற ஊதிய விகிதமாக மாற்றியமைக்கப்படுகிறது. 2000 மின்பாதை ஆய்வாளர் பதவிகள் புதியதாக உருவாக்கப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.86.42 கோடி கூடுதல் செலவாகும். கிராமப் பகுதிகளில் 383 முகவர் முதல் நிலை பதவிகள் சிறப்பு நிலை முகவர் பதவிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.19 லட்சம் கூடுதல் செலவாகும்.
ஒப்பந்தம் கையெழுத்து...
அதிக வருவாய் உள்ள 156 துணைகோட்ட அலுவலகங்களில் புதியதாக மதிப்பீட்டு அலுவலர் பதவிகள் உருவாக்கப்படுகிறது. கோயம்புத்தூர் பெருநகரம் மற்றும் மதுரை பெருநகர மின் பகிர்மான வட்டங்களில் 96 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள் புதியதாக உருவாக்கப்படுகிறது. பிரதி மாதத்தின் 4-ம் சனிக்கிழமை வாரியத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் விதமாக பணிநேரம் மாலையில் 15 நிமிடங்கள் நீடிக்கப்படும்.
பின் மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.