எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : சட்டசபைதேர்தல் நடந்த மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திரிபுரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் கம்யூனிஸ்ட் கோட்டை அங்கு தகர்ந்துள்ளது. மேகாலயாவில் இழுபறி நிலை நீடிக்கிறது. நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்ச்சித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை...
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன. திரிபுராவில் பிப்ரவரி மாதம் 18-ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் நேற்று காலை எண்ணப்பட்டன.
கருத்துகணிப்புக்கள்
மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சி நடந்து வந்தது. நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வந்தது.
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாரதீய ஜனதா இந்த தேர்தலை சந்தித்தது. மேகாலயாவில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்திருந்தன.
முதல்வர் வெற்றி...
நாகாலாந்தில் அங்காமி -2 தொகுதியில் முன்னாள் முதல்வர் நெப்யூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரேன் தொகுதியில் போட்டியிட்ட இன்னாள் முதல்வர் டி.ஆர். ஜிலியாங் வெற்றியும், பா.ஜ.க பிரமுகர்களில் துயி தொகுதியில் ஒய் பட்டான் வெற்றியும் கே.எல். சிஷி, அடாய்ஜூ தோல்வியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்று விட்டது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க இழுபறி நிலை நீடிக்கிறது. நாகாலாந்தில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.
கிரண் ரிஜிஜூ நம்பிக்கை
நாகலாந்து மாநிலத்தை ஆட்சி செய்த நாகா மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க. அந்த கூட்டணியை முறித்து கொண்டது. புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை பா.ஜ.க. சந்தித்தது. நேற்று வெளியாகியுள்ள வரும் தேர்தல் முடிவுகளின்படி நாகா மக்கள் முன்னணி 29 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 2 இடங்களில் வெற்றிப்பெற்றது.
என்.பி.எப் தீர்மானம்...
இங்கு ஆட்சி அமைக்க 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், தேர்தலுக்கு முன்னர் தனது கூட்டணி கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சரும், நாகலாந்து மாநில தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜூ, நாகலாந்தில் மற்ற கட்சிகளுடன் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாகா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜூ, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக நாகா மக்கள் முன்னணி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
நாகலாந்தில் பெற்றுள்ள வெற்றியின் மூலம் வடகிழக்கு இந்தியாவில் பா.ஜ.க. தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிக இடங்களில் ...
60 இடங்களை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், ஐக்கிய குடியரசு கட்சி 6 இடங்களிலும், மக்கள் குடியரசு முன்னணி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தொங்கு சட்டசபை
இங்கு ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், அதிகமான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவை சிறிய கட்சி அல்லது சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் காங்கிரஸ் கேட்டுப் பெற்று அரசு அமைத்தாலும், அந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தற்போது அமையவுள்ள சட்டசபை தொங்கு சட்டசபையாக இருக்கும். கூட்டணி கட்சிகள் திடீரென்று காலை வாரி விட்டால் மீண்டும் பொது தேர்தலை மேகாலயா சட்டசபை சந்திக்க நேரிடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
திரிபுரா
மொத்தம் = 59 / 60
பா.ஜ., கூட்டணி -43
இடதுசாரிகள் - 16
காங். - 0
மற்றவை - 0
நாகாலாந்து
மொத்தம் = 60 / 60
என்.பி.எப் -29
பா.ஜ.க கூட்டணி - 29
மற்றவை -2
காங். - 0
மேகாலயா
மொத்தம் = 59 / 60
காங்., - 21
என்பிபி - 19
பா.ஜ., - 2
மற்றவை -17.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.