முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி: அசாமில் மாநிலம் டின்சுயா மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்துக்குள் புகுந்த எலி ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக கடித்து குதறியிருப்பது வங்கி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம், டின்சுகியா மாவட்டம் லாய்புலி பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் கடந்த மே மாதம் 20-ம் தேதி முதல் வேலை செய்யாமல் இருந்ததால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்வதற்கு ஆட்களை அனுப்பியது வங்கி நிர்வாகம். எந்திரத்தை சரிசெய்ய வந்த ஊழியர்கள் குழு எந்திரத்தை திறந்து பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏ.டி.எம். எந்திரத்துக்குள் புகுந்த எலி ஒன்று, எந்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த இரண்டாயிம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து குதறியிருந்தது. எலி நடத்திய இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கில், ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகி உள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கவுகாத்தி நிதி நிறுவனம் ஒன்று மே 19-ம் தேதி இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ. 29 லட்சம் டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த திங்கள்கிழமை ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.17 லட்சம் மீட்டுள்ளதாக உள்ளூர் செய்தி சேனல் தெரிவித்துள்ளது. இது குறித்து டின்சுகியா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து