எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு:-
விரிவாக ஆய்வு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 515 புதிய பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பேருந்துகளை முறையாக பராமரிப்பது, போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர்கள் பிரச்னைகளை தீர்ப்பது, பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் அதிக அளவில் டீசல் விலை உயர்ந்துள்ளதால், போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வது, வருவாயை பெருக்குவது, பயணத்தின் போது பயணிகள் பாதுகாப்பினை உறுதி செய்வது, கட்டண உயர்வின் காரணமாக குறைந்துள்ள பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 21 அறிவிப்புகளையும் விரைவாக செயல்படுத்துவது, விபத்தில்லா ஓட்டுநர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
நல்ல வரவேற்பு...
மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்ற வழித்தடங்களில் புதிய விரைவு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயண நேரத்தை குறைப்பது, பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்வதே இதன் நோக்கம். குறிப்பாக திருவண்ணாமலை - சென்னை பயண நேரம் 1.15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. வருவாயும் அதிகரித்துள்ளது. கரூர் - கோவை செல்ல சாதாரண பேருந்துகளில் 3.30 நிமிடமாக இருந்தது 2.30 நிமிடமாக குறைந்துள்ளது. இச்சேவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த சேவையானது பிற ஊர்களிலும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பொது மக்கள் தனியார் மற்றும் தமது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை அதிகமாக பயன்படுத்திடும் நிலை உருவாகும். இதனால் இழந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை சரி செய்யப்படும்.
எதுவும் இல்லை...
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்., கட்டணம் உயர்த்துவது குறித்து திட்டம் எதுவும் இல்லை. நிதிச் சுமை மற்றும்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் ஆகியவற்றிற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி முதல்வரையும், துணை முதல்வரையும் நானும், போக்குவரத்து துறை செயலாளரும் சந்தித்து தெரிவித்துள்ளோம். விரைவில் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ரூ.3,685 கோடி...
பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் இந்திய அளவில்இயங்கும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் இலாபத்தில் இயங்குவதில்லை. ஒரு சிலதனியார் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்குவதன் மூலம் லாபம் ஈட்டுகின்றன. முற்றிலும் பொது மக்களின் சேவையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நஷ்டத்தை அரசு தான் வழங்குகிறது. குறிப்பாக தி.மு.க வின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் 3,685 கோடி ரூபாய் மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரால் 7 ஆண்டுகளில் 12,580 கோடி ரூபாய் அரசால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 60,000 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான நிலுவையில் இருந்த அனைத்து பணப்பலன்கள் ஏறத்தாழ 1500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊதிய உயர்வினை வழங்கி உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 22 லட்சம் அளவில் பயணிகள் குறைந்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாகபேருந்து கட்டண உயர்வின் தாக்கமானது சில மாதங்கள் வரை நீடிக்கும், பண மதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் காரணமாக தொழில்களில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் தனி நபர்வாகனங்கள் அதிகரிப்பு ஆகிவற்றின் காரணமாகவே இந்த குறைவு. இன்று நடைபெற்றகூட்டத்தில் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளில் கடந்த மூன்று மாதகாலத்தில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும், இந்த இழப்பினை ஈடு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மின்கலன் வாகனங்கள்
போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளவாறு சுற்றுச் சூழலை பாதுகாக்கின்ற வகையில் பேருந்துகள் இயக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில், இது போன்ற மின்கலன் வாகனங்கள் அதிக அளவில் இயங்கும். குறிப்பாக சென்னை மாநகரில் எந்தந்தவழித்தடங்களில் இது போன்ற பேருந்துகளை இயக்குவது குறித்து விரிவான கள ஆய்வுமேற்கொள்ளவிருக்கும் இக்குழுவினர் இன்னும் 10 நாட்களில் சென்னை வர உள்ளனர்.அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வாகனங்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
200 பேருந்துகள்....
இது குறித்து நானும், செயலாளரும், மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை டில்லியில் சந்தித்து 200 பேருந்துகள் வேண்டும் என்றுகோரிக்கை வைத்தோம். முதற்கட்டமாக 70 மின்கலன் பேருந்துகள் வாங்குவதற்கான கருத்துருஅனுப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் விலையானது 2 கோடி அளவில் இருந்தது தற்போது 1.50கோடியாக குறைந்துள்ளது, மேலும் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 160 நகரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசுபோக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு வரபிரசாதமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.