எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- வருவது எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா அரசின் திட்டங்களை மக்களிடம் முன்னிறுத்தி அமோக வெற்றி பெற்றிடுவோம் என்று திருமங்கலம் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபடத் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஆலம்பட்டி, கட்ராம்பட்டி ,அச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நலிவடைந்த குடும்பங்களுக்கு கழக அம்மா பேரவை சார்பில் தலா 10ஆயிரம் ரூபாயை குடும்பநல நிதியாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
அம்மா அரசின் சரித்திர சாதனைகளை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.கடந்த 17 மாத கால ஆட்சியில் 32 ஆயிரம் தடைகற்களை தகர்த்து எறிந்து மக்களுக்கு சீர்மிகு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.குறிப்பாக 23ஆயிரம் கோடியில் 50ஆயிரம் திட்டப்பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் திறந்து வைத்திருக்கிறார்கள்.48ஆயிரம் கோடிக்கு 60ஆயிரம் புதிய திட்டபணிகள் இன்றைக்கு நடைபெற்று வருகிறது.இந்த பணிகளும் விரைவில் முடிவடைந்திடும்.இந்தியாவிலே சிறந்த நிர்வாகத்திற்காக மக்களின் நலன் காத்திடும் அரசாக கேரள மாநிலத்திற்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.அம்மாவின் லட்சியக் கனவான அன்னைத் தமிழகம் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்திடும் லட்சியத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.இருப்பினும் குறிப்பிட்ட சில துறைகளில் நாம் இந்தியாவிலே முதலிடத்தில் இருக்கிறோம்.ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் காட்டி அம்மா சரித்திர சாதனை படைத்துள்ளார்.அனைத்து வசதிகளும் ஒருங்கே கிடைத்திடும் இடமான தமிழகம் அதிகளவு முதலீடுகளை கவர்ந்து வருகிறது.இருப்பினும் எதிர்கட்சியினர் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைத்து 32ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து கடைக் கோடியிலிருப்பவர்களுக்கும் அம்மாவின் சீர்மிகு திட்டங்களை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.அதை மக்களிடம் எடுத்துச் சொல்லிட ஊர் ஊராக எடுத்துச் சென்றிட கழக அம்மா பேரவையின் சார்பில் சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரங்;கள் முறியடித்திடும் வகையில் இந்த சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முயற்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமாக திகழ்ந்திடும்.
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்காக அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை அவர்கள் நடத்தி இருப்பவர்களுக்கே பத்து பொறுப்புகளை வழங்குகிறார்கள்.திரும்பத் திரும்ப அவர்களுக்கே பல்வேறு பதவிகள் வழங்கப்படுகிறது.ஒருவரே அமைப்பு செயலாளர்,அவரே மாவட்டச் செயலாளர்,அவரே கிளைச் செயலாளர் என ஒருவரே அனைத்து பதவிகளையும் வகிப்பது புதிய முறையாக இருக்கிறது.அம்மா இருக்கும் போது ஒருவருக்கு அரசு பொறுப்பு ஒன்று இருக்கும் கழக பொறுப்பு ஒன்று இருக்கும்.அங்கு உழைப்பிற்கோ தியாகத்திற்கோ இடம் கிடையாது.யார் கேட்டாலும் பதவிகளை அளவீடுகள் இல்லாமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒட்டு மொத்தமாக நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு அம்மா அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள்.அதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு சாத்தியக்கூறுகளை கண்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்வதுடன் இது போன்ற திட்டங்களுக்கு உரிய முன்னுரிமை கொடுக்கப்படும். நமது பகுதியில் உள்ள 58-ம் கால்வாய் திட்டம் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது.மிக விரைவில் அதில் தண்ணீர் வருகிற காட்சியை நாம் காண இருக்கிறோம்.இந்த திட்டத்தை மிக விரைவில் முதல்வர் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்கள். பொதுவாக துயர சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில் பல்வேறு தலைவர்கள் வரும் போது நம்மிடம் உள்ள காவல்துறையை பயன்படுத்திஉச்சகட்ட பாதுகாப்பு வழங்குவது நமது மரபாகும்.காவல் துறையின் நடைமுறைப்படி அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து ராகுல்காந்தி எங்கும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.இங்கிருப்பவர்கள் சிலர் அரசியல் காரணங்களுக்காக சொல்கிறார்களே தவிர ராகுல்காந்தி சொன்னதாக தகவல் இல்லை.எந்தவித சட்;டம் ஒழுங்கு பிரச்சனையும் இன்றி சமாளித்து அம்மாவின் அரசு இதில் வெற்றி பெற்றுள்ளது.
வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மாவுடைய அரசின் சாதனைகளை தியாகங்களை முன்னிறுத்தி மக்களை நேரில்சந்தித்து வெற்றி பெறுவோம்.தமிழ்நாடு என்றால் எப்போதுமே இரட்டைஇலை தான் மக்களுக்கு பிடித்த சின்னம்.இந்தியாவிலே 3வது பேரியக்கமாக அ.தி.மு.க வர உதவியாக இருந்தது இரட்டை சின்னம்.மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ள சின்னமான இரட்டைஇலை என்றுமே வெற்றி பெற்றிடும்.தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்திடும்.அதற்கு கட்டுப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்களும் செயல்படுவோம்.புதிய புதிய திட்டங்கள்வந்து கொண்டே இருக்கிறது.மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசு நாள்தோறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.எய்ம்ஸ் மருத்துவமனை,பஸ்போர்ட்,ஸ்மார்ட் சிட்டி போன்ற அனைத்து திட்டங்களும் புதியவைதான்.பஸ்போர்ட் குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்கள்.அரசியல் காழ்ப்பணர்ச்சி காரணமாக தொடுக்கப்படுகிற அந்த வழக்குகள் என்பதை நாங்கள் பலமுறை மக்களிடத்தில் சொல்லியிருக்கிறோம்.அது உண்மை என்பது இன்றைக்கு வெட்;டவெளிச்சமாகியுள்ளது.ஒரே நாள் இரவு வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப்படுகிறது.அவர்களுக்கு என்றால் ஒருநீதி மற்றவர்களுக்கு என்றால் ஒருநீதி என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துள்ளது.மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு என்றால் அனைத்தையும் வாபஸ் வாங்குகிறார்கள்.மற்றவர்களுக்கு என்றால் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.அம்மா முதல்அமைச்சராக இருந்த போது உயிர் பிரிந்தது.அது மரபுப்படி அங்கே இடஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டது.நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்ற காரணத்தினால் இடம் ஒதுக்க இயலவில்லை என்றகாரணத்தை முதல்வர் சொல்லும் போது உடனடியாக வழக்கு வாபஸ் வாங்கப்படுகிறது.இதிலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்;ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம்,ராமசாமி,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,அவைதலைவர் அன்னகொடி,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், பாவடியான்,பாஸ்கரன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.