எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு உரிய அளவில் இடம் பெறவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வரலாற்று பேரவையின் வெள்ளி விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஓரு திரைப்படப் பாடலில், ஒரு சம்பவம் என்பது நேற்று அது சரித்திரம் என்பது இன்று அது சாதனையாவது நாளைவரும் சோதனைதான் இடைவேளை என்று பாடினார். அந்தப் பாடலில் வரும் சம்பவங்களும், சோதனைகளை சென்ற சாதனைகளும், அந்தச் சாதனைகளால் விளையும் சரித்திரமும்தான் வரலாறு ஆகிறது. தமிழ்நாட்டை மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ் - திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக் குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோயில் - சிலை வழிபாடுகள், திராவிடக் கலைகளான தென்னிந்திய கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகுந்த தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
எனவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு இந்திய பண்பாடு, நம்பிக்கை மரபுகளை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. தமிழர்கள், கடல் கடந்து சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். யவனர்களின் அத்துமீறல்களை எதிர்த்து வென்றவர்கள் சேரர்கள். இலங்கைக்கும், தமிழ் அரசுகளுக்கும் இடையிலான அரசியல், ராணுவ, வணிக பண்பாட்டு உறவுகள், இந்திய தேசிய வரலாற்றில் தமிழ்நாட்டிற்கான தன்னிகரற்ற பங்கினை நிரூபிப்பதாக உள்ளன. சங்க காலச் சோழ மன்னன் கரிகால் வளவனுக்கு முன்னரேயே இத்தகைய உறவுகள் இருந்து வரலாற்று தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து, பேரரசை உருவாக்கிய ஒரே அரச வம்சம் தஞ்சையைச் சார்ந்த சோழர் வம்சமே ஆகும். அதுமட்டுமல்ல,தென்கிழக்கு ஆசிய நாடுகளில்பண்பாடு, கலைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களும் நமது தமிழர்களே ஆவர். அந்தக் காலம் முதல், இன்றைய தினம் வரை, அனைத்து மக்களையும், அனைத்து மதத்தினரையும், அன்புடன் நடத்தி, சமூக நல்லிணக்கத்துடன், பிறருக்கு முன்மாதிரியாக, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயரிய பண்பினைக் கொண்டவர்கள் தமிழர்கள். அதுதான் தமிழ் மண்ணின் மாண்பு. அதன் காரணத்தினாலேதான் தமிழகம், அப்போதும், இப்போதும், அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அத்தகைய காரணங்களால்தான், தமிழ் மண்ணில் சமணமும், பௌத்தமும், சைவமும், வைணமும், இஸ்லாமும், கிறித்துவமும் செழித்து வளர்ந்தன. ஆனால், இந்திய தேசத்தின் வரலாறு வரையப்படும்போது, இதனைக் கருத்தில் கொள்ளாமல், கங்கை கரையை மையமாக வைத்து வரையப்பட்டது.
அதனால்தான் தென்னிந்தியா - தமிழகம் போன்றவற்றின் பண்பாடுகள் புறக்கணிக்கப்படக்கூடிய துணை மரபுகளாக இருந்தன. கங்கை கரை நாகரிகங்களின், பேரரசுகளின், பண்பாடுகளின், விரிவாக்கம் மட்டுமே இந்திய வரலாறு என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தவறான அணுகுமுறை என்பதால்தான், வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாளர்கள் இந்திய வரலாறு காவிரிக் கரையிலிருந்து துவங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தான், தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை போன்ற தமிழ் வரலாற்று ஆய்வு அமைப்புகள், தமிழக பண்பாடு குறித்து மறைக்கப்பட்ட தகவல்களை, அறிவியல் முறையில் உறுதி செய்து, தமிழகத்திற்கும் தென்னகத்திற்கும், இந்திய தேசிய வரலாற்றில் உரிய இடம் கிடைக்கச் செய்ய முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. இந்த சிறப்பான செயல்களைப் பெரிதும் பாராட்டி, உங்கள் பணி வெற்றியுடன் தொடர்ந்திட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு அதற்கு உரிய அளவில் இடம் பெறவில்லை என்பதுதான் அது. இது வேதனைக்குரிய ஒன்றாகும். நவீன இந்தியாவில், சமூக மாற்றங்களை முன்வைத்து அரசியல் இயக்கம் நடத்திய ஒரே மாநிலம், அன்றைய சென்னை இராஜதானி, அதாவது இன்றைய தமிழகம். தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு சமூக சேவர்கள் ஆற்றிய பணி இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்திய தேசிய வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட அரசியல் 1852 ஆம் ஆண்டு ஆரம்பித்துவிட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில்தான் இந்திய தேசிய சமூக காங்கிரஸ் என்ற சமூக சிந்தனையாளர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவை குறித்தும், இந்திய விடுதலைக்காகவும் கனல் தெறிக்கும் கவிதைகளை நாட்டுக்குஅர்ப்பணித்த மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு தேசிய வரலாற்றில் உரிய அளவில் இடமில்லை என்பது வருந்தத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் மகளிருக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே, சென்னை ராஜதானியில் மகளிருக்கு வாக்குரிமை கிடைக்கச் செய்த கட்சி, நீதிக் கட்சி! அதற்கும் தேசிய வரலாற்றில் உரிய இடம் அளிக்கப்படவில்லை. மக்கள் செல்வாக்கு படைத்த திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய அண்ணா, எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இந்த நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவாகும். தமிழர்களுக்கு, தமிழ் மண்ணிற்கு, இந்திய தேசத்திற்கு, ஆற்றிய அந்த பங்கினை தேசிய வரலாற்று புத்தகங்கள் குறிப்பிடுவதில்லை. இந்த வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்திய தேசிய வரலாறு படைக்கப்பட வேண்டும். திராவிடர் தலைவர்களின் தொண்டுகளையும், அம்பேத்கரின் பங்களிப்பினையும் எவ்வகையிலும் குறைத்திடாது, இந்திய தேசிய வரலாற்றில் இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்களின் பண்பாடுகள் இந்திய வரலாற்றில் உரிய இடத்தினைப் பெறவும், உங்களது ஆய்வுப் பணிகள் மேலும் செம்மையாக நடைபெறவும் அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.