எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை,அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்பதற்காக எதிரிகளுடன் சேர்ந்து டி.டி.வி. தினகரன் சதித்திட்டம் தீட்டுகிறார் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி: எம்.எல்.ஏ-க்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், மக்கள் பணியெல்லாம் முடங்கியிருக்கிறது என்று...
பதில்: யாரால் முடங்கியிருக்கிறது? 18 எம்.எல்.ஏ.-க்களால் தான் முடங்கியிருக்கிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக இயக்கம். அம்மா இந்த இயக்கத்தை கட்டிக் காத்து சுமார் பதினைந்தரை ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து நாட்டுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்தார்கள். அம்மாவின் உழைப்பால் இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்கள். அம்மா அவர்களுடைய அரசுக்கு துரோகம் விளைவித்தவர்களுக்கு தண்டனையை இறைவன் அளித்துள்ளான். அவர்கள்தான் துரோகம் செய்தார்கள், ஆட்சிக்கும் துரோகம் செய்தார்கள். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, தொய்வே கிடையாது. 18 சட்டமன்றத் தொகுதியில் மட்டுமல்ல, 234 சட்டமன்றத் தொகுதியிலும் அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
கேள்வி: வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம், தற்போது துரோகிகளின் சின்னமாக மாறியிருக்கிறது என்று டிடிவி பேசியிருக்கிறார்...
பதில்: அவரே துரோகிதான். அவர்தான் முதல் துரோகி. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என்று எதிரிகளோடு சேர்ந்து சதிசெய்து கொண்டிருப்பவர் டி.டி.வி.தினகரன் அவர்கள், அது நாட்டுமக்களுக்கும் தெரியும், கழகத்தில் இருக்கின்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும்.
கேள்வி: தேர்தல் வாக்குறுதியின்போது அம்மா அவர்கள், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன்
பதில்: அன்றையதினம் மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள்,பெரும்பாலானவர்களிடம் செல்போன் இல்லாமல் இருந்தது. இப்பொழுது அனைவரிடத்திலும் செல்போன் இருக்கிறது. இருந்தாலும், அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.
கேள்வி: அந்த 3 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு இரண்டாவது முறையாக கவர்னருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்கிறார்கள், ஆனால் அந்த 7பேரின் விடுதலைக்காக அழுத்தம் கொடுப்பதில் சுணக்கம் இருக்கிறது என்கிறார்களே?
பதில்: அப்படி கிடையாது. சட்டரீதியாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் இதுவரை நாம் விடுதலை செய்திருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று மேதகு ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அமைச்சரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றப் பெற்று ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது, ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
கேள்வி: சந்திரபாபு நாயுடு நேற்று தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி கேட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்?
பதில்: சிரிப்புதான் வருகிறது. இவர்கள் அவ்வப்போது பச்சோந்தி போல் நிறம் மாறக் கூடியவர்கள். திமுக முதலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டதால், அவர்களுக்கு ஓரளவு பெரும்பான்மை கிடைத்தது, அப்பொழுது பாரதீய ஜனதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். இப்பொழுது பாரதீய ஜனதா தீண்டத்தகாத கட்சி, மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால், இவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சராக இருந்தபொழுது, இதெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை. அதுவும், முரசொலிமாறன் உடல்நிலை குன்றி ஒரு வருடம் பேச்சுமூச்சு இல்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அப்பொழுதுகூட, மத்தியில் ஆண்ட பாரதீய ஜனதா அரசு அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தது. அப்பொழுதெல்லாம் பாரதீய ஜனதா நல்ல கட்சி, நல்ல அரசு என்று பாராட்டினார்கள், இப்பொழுது மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள்.
39 இடங்களில் வெற்றி... நாங்கள் அப்படியல்ல, எங்கள் கொள்கையில் எப்பொழுதும் பிடிப்போடு இருக்கிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014 தேர்தலில் தன்னந்தனியாக நின்று, தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெற்று, இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி என்ற ஒரு பெரிய வாய்ப்பை நம் தமிழகத்திற்கு தேடித் தந்தார்கள். அன்றையிலிருந்து இன்று வரைக்கும் நாங்கள் யாருடனும் கூட்டணியே வைக்கவில்லை. தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ, அப்பொழுது ஆதரிக்கின்றோம், தமிழகத்திற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களோ, அப்பொழுது நாங்கள் எதிர்ப்புதெரிவிக்கின்றோம்.
தமிழக மக்களுடைய உரிமைகளை காப்பதற்காகவும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கின்ற திட்டங்களை பெறுவதற்காகவும் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோமே தவிர, கூட்டணி கிடையாது. ஆனால் அவர்கள் பாரதீய ஜனதா சரிகின்றபொழுது உடனடியாக மாறி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு, வெற்றி பெற்று மத்தியில் அமைச்சராக இருந்தார்கள். ஆகவே, காலத்திற்கேற்றவாறு தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.
போராடி, வாதாடி...சந்திரபாபு நாயுடு 2011ல் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்து, போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள், நாலரை ஆண்டுகாலம் அனுபவித்து விட்டார்கள். இப்பொழுது தேர்தல் வரும்போது மாறிவிட்டார்கள். இவர்கள் பச்சோந்திபோல் நிறம் மாறுபவர்கள், கொள்கை பிடிப்பு கிடையாது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் கொள்கை பிடிப்போடு இருக்கும் கட்சி, ஆட்சியும் அதே மாதிரிதான். அதேபோல் மத்தியில், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை பெறுவதற்கு போராடி, வாதாடி நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
வேண்டியதுதானே ? இப்பொழுது இவ்வளவு பேசுகிறாரே, இப்பொழுது வந்துவிட்டு சென்றாரே சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் பாலாற்றில் எவ்வளவு அணை கட்டுகிறார்கள், ஏதாவது பேசினாரா? பக்கத்தில் துரைமுருகன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் மட்டும் இதை எழுப்பினார். பக்கத்தில்தானே உட்கார்ந்து கொண்டிருந்தாரே, உடனே கேட்க வேண்டியதுதானே? கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியிருக்கிறார். இன்றைக்கு பாலாறே வறண்டு போய்விட்டது.
கவலையே கிடையாது... உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பு, பாசம், அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் இருந்திருந்தால் இவர்கள் அதை கேட்டிருக்க வேண்டும், அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துகிறீர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்றைக்கு நீராதரமாக விளங்குவது இந்த வட மாவட்டத்தில் பாலாறுதான். ஆகவே, நீங்கள் அந்த தடுப்பணைகளையெல்லாம் இடித்துவிட்டு, எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீரை தயவு செய்து கொடுங்கள் என்று ஒரு வார்த்தையாவது கேட்டார்களா? ஆனால் அதிகாரம் தான் இவர்களுக்கு முக்கியம், பதவி தான் முக்கியம், ஆகவே, அவர்களுக்கு நாட்டு மக்களைப் பற்றியோல, தமிழ்நாட்டு விவசாயிகளைப் பற்றியோ கவலையே கிடையாது, அதிகாரம் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை.
கேள்வி: சர்க்கார் பட பேனர்களை அதிமுக காரர்கள் கிழித்தார்கள் என்று...
பதில்: அ.தி.மு.க.காரர்தான் கிழித்தார் என்பது தவறான செய்தி. பொதுமக்கள் சேர்ந்து தம்முடைய எதிர்ப்பை தெரிவித்ததன் காரணத்தினால் அவர்கள் அந்தக் காட்சியை அகற்றியிருக்கிறார்கள். அந்தந்த தலைவர்கள் கொண்டுவந்த திட்டத்தை கொச்சைப்படுத்துகின்றபொழுது, அவமானப்படுத்துகின்ற பொழுது தன்மானம் உள்ள எந்த ஒரு கட்சிக்காரனும் கொதித்து எழுவார்கள்.
கேள்வி: 48 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் மழை வருமென்று வானிலை ஆராய்ச்சி நிலைத்தில் சொல்கின்றார்களே?
பதில்: வானிலை ஆராய்ச்சி நிலையம் சொல்லிக் கொண்டே இருக்கிறது இதுவரை மழை வந்த மாதிரி தெரியவில்லை. அவர்கள் எத்தனையோ முறை அறிவிப்பு கொடுத்துவிட்டார்கள், ஆனால் மழை வந்த மாதிரி தெரியவில்லை, இருந்தாலும், அந்த அறிவிப்பிற்கு இணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசால் அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை அமைச்சர் அதில் தனியாக கவனம் செலுத்தி வருகிறார்.
கேள்வி: இந்த அரசு விரைவில் தடம்புரளும் என்று கமல் சொல்லியிருக்கின்றாரே?
பதில்: கமலுக்கு 64 வயது வரை படத்தில் நடித்து, ஓய்வு பெற்ற பிறகு, மக்கள் அவரை கண்டு கொள்ளாததால், இப்பொழுது அரசியலில் ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். அரசியலில் அவருடைய நடிப்பு எடுபடாது. திரைப்படங்களில் 44 ஆண்டு காலம் நடித்தும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்த பிறகு அரசியலுக்கு வந்தா அவருடைய நடிப்பு எடுபட போகிறது?
கேள்வி: சர்கார் பட விவகாரத்தில் தணிக்கைக் குழு அனுமதி அளித்த பிறகும்.....?
பதில்: ஏற்கனவே சுமூகமானதை ஏன் மீண்டும், மீண்டும் பிரச்சினை செய்கின்றீர்கள்? ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களும் தயவுசெய்து, அருள்கூர்ந்து விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: சத்துணவு ஊழியர்களுக்கு நலவாரியம் அமைப்பது தொடர்பாக?
பதில்: அரசு பரிசீலிக்கும். மேலும், இலங்கையில் தமிழின மக்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ராஜபக்சே அவர்கள் அதிபராக இருந்தபொழுது தமிழின மக்கள் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எத்தனையே பேர் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அம்மா, ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்கள். இன்றையதினம் இலங்கை அதிபராக இருக்கக்கூடிய சிரிசேனா அவர்கள் திட்டமிட்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்கே அவர்களை அகற்றிவிட்டு, ராஜபக்சே அவர்களை பிரதமராக அறிவித்தது ஜனநாயகப் படுகொலை. அங்கிருக்கக்கூடிய தமிழின மக்கள் ஏற்கனவே அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டுமென்பதை இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.