எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திசை மாறியது...வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்ந்தது. அதன்பின்னர் மணிக்கு 4 கிமீ என அதன் வேகம் குறைந்தது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல்,இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
பிற்பகல் கரைகடக்கும் ....இந்நிலையில், நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து 690 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்த புயல் கஜா படிப்படியாக வேகம் எடுத்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசைநோக்கி நகரத் தொடங்கியது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் புயல் பாம்பன்- கடலூர் இடையே நவம்பர் 15-ம் தேதி இன்று பிற்பகல் கரைகடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்....புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கஜா புயலால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.இதற்கிடையே, கஜா புயல் காரணமாக சென்னைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் கஜா புயல் தற்பொழுது நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 790 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பலத்த காற்று வீசும்...இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 15ம் தேதி பிற்பகலில் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இன்று (நேற்று) காலை முதல் புயல் கரையை கடக்கும் வரை கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 - 90 கி.மீ. வேகத்திலும் சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
பாதிப்பு இல்லை...இந்த மாவட்டங்களில் 15ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் 15ம் தேதி (இன்று) வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை 15, 16, 17ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கஜா புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இருக்காது. ஆனால் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி....கஜா புயலை எதிர்கொள்வதற்காக சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்,
அப்போது அவர் கூறியதாவது:- ‘கஜா’ புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயல் 3 முறை திசை மாறி உள்ளது. தற்போதும் அதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கடலூர் முதல் பாம்பன் வரை புயல் சேதம் அதிகம் ஏற்படும் என்பதால் சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தயார் நிலையில் முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
2559 இடங்கள் பாதிப்பு.....தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் 3, சிதம்பரத்தில் 2, சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 1 வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர். கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர். புயலால் 2559 இடங்கள் பாதிக்கப்பட கூடும் என கண்டறியப்பட்டு உள்ளதால் அங்கு மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி., எந்திரங்கள், மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் உள்ள ஜெனரேட்டர்களை மேல்தளத்தில் வைக்கும் படியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் முழுமையாக நிரப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.
கலெக்டர்கள் முடிவு...ஆக்சிஸன் சிலிண்டர், அத்தியாவசிய மருந்து பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை சரி செய்ய தேவையான ஊழியர்களும் 1125 நீச்சல் வீரர்களும், 657 பாம்பு பிடிப்பவர்களும் தயார் நிலையில் உள்ளனர். புயலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அரசு ஊழியர்கள் விடுமுறை இன்றி பேரிடர் சமயத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம். மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் ஒரு குழு, கடலூரில் ஒரு
குழு, நாகப்பட்டிணத்தில் இரண்டு குழுக்கள், மேலும் மத்திய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் ஒரு குழு,கடலூரில் ஒரு குழு,ராமநாதபுரத்தில் ஒரு குழு,சிதம்பரத்தில் இரண்டு குழுக்கள், நாகப்பட்டிணத்தில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் மத்திய, மாநில பேரிடர் மீட்புகுழுக்களை தங்கவைக்க 37 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.