எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 நாட்களில் பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என்று திருவாரூரில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்....திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
புயலால் பாதிப்பு...கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது, கஜா புயல் பாதிப்பு என்பது நாகை திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவும் திண்டுக்கல் ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு பகுதியாகவும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை மன்னார்குடி கோட்டூர் மற்றும் திருவாரூர் ஒன்றியங்கள் முழுமையாகவும், வலங்கைமான் குடவாசல் நன்னிலம் நீடாமங்கலம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்கள் ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ வசதியும்... மாவட்டம் முழுவதும் மொத்தம் 53 ஆயிரத்து 234 குடிசைகளும் 12 ஆயிரம் ஓட்டு வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 205 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 257 பேர் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இந்த மையங்களில் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது. 11பேர் இறந்துள்ளனர். முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உயர் அதிகாரிகள் கண்காணிப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் மொத்தம் 6500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மின்துறைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 7400 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. 120 டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாலையில் மரங்கள்....33 ஆயிரத்து 537 மரங்கள் சாலைகளில் விழுந்தில் 17 ஆயிரத்து 684 மரங்கள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 65 சதவீத சாலைகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. கலெக்டர் மட்டுமன்றி ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன் அமுதா பாலாஜி ஆகியோரும் பணியாற்றிவருகின்றனர் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கூட பாராட்டியுள்ளன. அவர்களுக்கு அரசின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் தற்போது குடிநீர் என்பது ஜெனரேட்டர்களை கொண்டும் லாரிகள் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மின்சார பணிகள் 35 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. படிப்படியாக இதனை நிறைவேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முழு கணக்கெடுப்பு... பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாளையும் (இன்று) நாளை மறுதினமும் (நாளை) ஆய்வு செய்ய உள்ள நிலையில் எந்தெந்த பகுதிகளை பார்வையிடுகிறார் என்பது குறித்து இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. முதல்வரின் இந்த இரண்டு நாள் ஆய்வுக்குப் பின்னர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் இதுவரையில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 257 பெயர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 674 ஜே.சி.பி. இயந்திரங்களும் 877 மரம் அறுக்கும் இயந்திரங்களும் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர 195 ஆயில் இன்ஜின்கள் மற்றும் 958 ஜெனரேட்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கஜா புயல் பாதிப்புகள் குறித்து 2 நாட்களில் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.