முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர் வசுந்தராவை எதிர்த்து ஜஸ்வந்த்சிங் மகன் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்,ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வசுந்தரா ராஜேவை எதிர்த்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க. சார்பில் கடந்த ஆண்டு போட்டியிட்டு வென்ற மன்வேந்திர சிங், கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வசுந்தரா தாஸ் போட்டியிடும் ஜலபிரதான் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் உள்ளதால் இருமுனைப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் 156 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நேற்று 2-வது கட்டமாக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் மன்வேந்திர சிங் ஜலபிரதான் தொகுதியில் முதல்வர் வசுந்தரா ராஜேவை எதிர்த்துக் களமிறங்குகிறார்.கடந்த 2014-ம் ஆண்டு பார்மர் மாவட்டத்தில் சியோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மன்வேந்திர சிங். ஆனால், பா.ஜ.க.வின் தனது தந்தை ஜஸ்வந்த் சிங் ஓரம் கட்டப்பட்டதை அறிந்து மன்வேந்திர சிங் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, பா.ஜ.க.வில் சேர்ந்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டதாகக் கூறி அந்தக் கட்சியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தச் சூழலில் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக ஜலபிரதான் தொகுதியில் மன்வேந்திர சிங் களமிறங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து