எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த கஜா புயலை டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தைரியமாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுக் குழு தலைவரான மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நித்துறை ஆலோசகர் ஆர்.பி. கவுல், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் (பொ) பி.கே.ஸ்ரீவஸதவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மானிக் சந்திரா பண்டிட், மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்காள், நீர்வளத்துறை இயக்குநர் ஜே.ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் இளவரசன் ஆகியோரை கொண்ட மத்திய குழுவினர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, புதூர் கிராமத்தில், கஜா புயலால் சேதமடைந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டினை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து சேத விவரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், அப்பகுதி மக்களிடம் கால்நடைகள் சேதம் மற்றும் நெற்பயிர்களின் சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, புலவன்காடு கிராமத்தில், விவசாயி நாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் புயலினால் முற்றிலும் அழிந்து போன தென்னந்தோப்பினை மத்திய குழுவினர் பார்வையிட்டு சேதம் குறித்து கேட்டறிந்தனர். ஒரத்தநாடு புதூர் கிராமத்திற்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்த போது அவர்களிடம் கிராம மக்கள் கண்ணீர் மல்க புயலால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்போது சில பெண்கள் திடீரென அதிகாரிகள் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர். சேத விவரங்களையும் கண்ணீர் மல்க விவசாயிகள் மத்திய குழுவிடம் தெரிவித்தனர்.
பின்னர், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, நெம்மேலி திப்பியக்குடி கிராமத்தில் துணை மின்நிலையங்கள் வழியாக 175 கிராமங்கள் பயனடையும் பிரதான 230/110 கே.வி. திறன் கொண்ட, கஜா புயலால் சேதமடைந்த துணை மின் நிலையத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை உளுர் கிராமத்தில், 282 ஹெக்டேர் தென்னை சாகுபடி சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக தென்னை பயிர் சாகுபடி செய்து வரும் மன்சூர் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதை பார்வையிட்ட மத்திய குழுவினர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணப் பயிர்களின் சேதம் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மல்லிப்பட்டினம் கடலோர கிராமத்தில், மீன்பிடி துறைமுகம், மீனவர் குடியிருப்பு, ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் சேதம் குறித்து அப்பகுதியிலுள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும், 246 விசை படகுகள், 832 என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 147 கட்டுமர படகுகள், 1,428 மீன்பிடி வலைகள், 1440 இஞ்சின்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டு, அவற்றின் சேத விவரம் குறித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
முன்னதாக தஞ்சாவூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த மத்தியக் குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை புயலால் சேதமடைந்த வீடு, பயிர்கள், தென்னை, மின் மாற்றிகள், கால்நடைகள் குறித்த புகைப்படக் விளக்க காட்சி மற்றும் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை விளக்கி கூறினார்.
இதையடுத்து தஞ்சையில் இருந்து மாலையில் புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் சென்றனர். அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணியளவில் திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு சென்றனர். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிய மத்திய குழுவினர் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர். இதையடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர். முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் தென்னை மரங்கள் அதிகம் சேதமடைந்துள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.