முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சையது மோடி பாட்மின்டன் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லக்னோ : சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை சாய்னா நேவல், பைனலில் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

• உ.பி., தலைநகர் லக்னோவில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் சமீர் வர்மா, சீனாவின் லுா குவாங்ஜு மோதினர். இதில் சமீர் வர்மா 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாய்னா நேவல், சீனாவின் ஹான் யூ மோதினர். இதில் ஏமாற்றிய சாய்னா 18-21, 8-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து