எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் பாசன வசதி பெற்றிடும் வகையில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி அணைக்கட்டு வரை ரூ.2.98கோடி மதிப்பீட்டில் கவுண்டாநதியை புனரமைத்திடும் திட்டத்திற்கான பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
குண்டாறு நதியானது மதுரை மாவட்டம் சாப்டூர் வனத்தின் வருசநாட்டு மலைப்பகுதியின் கிழக்கே ஆரம்பமாகி கவுண்டாநதி என்ற பெயரில் திருமங்கலம் வட்டம் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் சுமார் 30மீட்டர் அகலமுள்ள ஓடையாகவும்,அதன்பின்னர் சுமார் 60 முதல் 120 மீட்டர் அகலத்துடன் தென்மேற்காகச் சென்று வரட்டாறு நதியுடன் இணைகிறது. அதனை தொடர்ந்து காரியாபட்டி வட்டம் பி.புதுப்பட்டி அருகே தெற்காறுடன் இணைந்த பின் குண்டாறு என்று அழைக்கப்படுகிறது.இதனிடையே கவுண்டநதியை சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி அணைக்கட்டு வரை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் பொதுப்பணித் துறை மூலம் ரூ.2.98கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇந்த திட்டத்தின் கீழ் கவுண்டாநதியை சௌடார்பட்டி அணைக்கட்டிலிருந்து திரளி அணைக்கட்டு வரை சுமார் 9.10 கி.மீ நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி இயந்திரங்கள் மூலம் ஆற்றுப்படுகையில் படிந்துள்ள மண்மேடுகளை அகற்றி,மேடு பள்ளங்களை ஆற்றின் படுகை மட்டத்திற்கு சமன்படுத்தி இருபுறமும் கரைகள் அமைத்து புனரமைத்திட திட்டமிடப்படுள்ளது.
மேலும் சிறு ஓடைகள் ஆற்றில் கலக்கும் இடங்களில் அரிமானங்களை தடுக்க உரிய சுவர்களும்,ஆக்கிரமிப்புகளை தடுத்திடும் பொருட்டு நில அளவை செய்து எல்லை கற்கள் நடவும் திட்டமிடப்படுள்ளதுடன் கவுண்டாநதியின் ஆற்றின் குறுக்கே சௌடார்பட்டி அணைக்கட்டினை புனரமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சௌடார்பட்டி,கிழவனேரிதங்களாச்சேரி,திரளி(பெரிய) உள்ளிட்ட கண்மாய்களின் மூலம் சுமார் 1194 ஏக்கர் நிலம் பாசனவசதி உறுதி செய்யப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரித்து திருமங்கலம் வட்டத்திலுள்ள சௌடார்பட்டி தங்களாச்சேரி,கிழவனேரி,மீனாட்சிபுரம்பொன்னம்பட்டி,நடுவக்கோட்டை மற்றும் திரளி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்றிடுவார்கள்.மேலும் இந்த பகுதியில் நிலத்தடிமட்டம் வெகுவாக உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறது.
அதன்படி திருமங்கலம் வட்டத்தில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல்திரளி அணைக்கட்டு வரை கவுண்டாநதியை ரூ.2.98கோடி மதிப்பீட்டில் புனரமைத்திடும் திட்டத்திற்கான பூமிபூஜை விழா நடுவக்கோட்டை பகுதி கவுண்டாநதி அணைக்கட்டு பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறையின் குண்டாறு வடிநில மேம்பாடு செயற்பொறியாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தார்.உதவி செயற் பொறியாளர் லீலாவதி வரவேற்றார்.ஏராளமான விவசாய பெருமக்களும்,பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரூ.2.98கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிடும் வகையில் கவுண்டாநதியை புனரமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நடுவக்கோட்டை ஆற்றுப்பகுதியில் புனரமைப்பு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சாப்டூர் வனப்பகுதியிலிருந்து சௌடார்பட்டி வரையில் 34 கி.மீ தூரமும், ஏறத்தாழ 100கிமீ முன்பாக உருவான காட்டாறு ஆகும்.இது வரும் பகுதியில் மரம்,செடி,கொடி இருந்ததால் நீர்வரத்து முழுமையாக உள்வாங்குவதில் சிரமம் இருந்தது.இதையும் தாண்டி வரும்நீர்வரத்து ஆங்காங்கே வெளியேறிச் சென்றிடும் வகையில் விவசாயிகளுக்கு பயன்தராத வகையில் இருந்தது.இதனை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் லீலாவதி,விஸ்வநாத் ஆகியோர் கொண்டு சென்றதன் பேரில் இந்த கவுண்டாநதியை புனரமைத்திடும் திட்டம் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.தற்போது சௌடார்பட்டி முதல் திரளி வரை ரூ.2.98கோடி செலவிலும்,அரசபட்டி முதல் குராயூர் வரையிலும் பின்னர் சென்னம்பட்டி வரையிலும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது.தற்போது அரசபட்டி முதல் குராயூர் வரையிலான திட்டமதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.இதனால் சாப்டூர் வனப்பகுதியில் நமக்கு என்ன நீர்வரத்து கிடைக்கிறதோ அதனை முழுமையாக இந்த பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்திட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைக்கு தண்ணீரின் அவசியத்தை நாம் முழுமையாக உணர்ந்து இருக்கிறோம்.அதனால் தான் மன்னராட்சி காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்தினை நாம் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.தற்போது முதல்வர் வெளியிட்டுள்ள அரசாணையில், 6மாத காலத்திற்கு எந்தெந்த அரசுநிலங்களில் ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறதோ அதற்கெல்லாம் பட்டா வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவற்றில் ஆட்சேபகரமான புறம்போக்கில் இருந்தால் அதற்கு பதிலாக பட்டா இல்லாமல் தனியார் நிலங்களை கொள்முதல் செய்து அந்த நிலங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி கொடுக்கக்கூடிய உத்தரவையும் முதல்வர் தந்துள்ளார்.யாரெல்லாம் அரசு நிலங்களில் 5ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகளை கட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்கும் சூழலை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார்.இருப்பினும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மட்டும் தனியாக அடுக்குமாடி குடியிருப்பகள் கட்டித் தந்திடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.இந்த திட்டத்தின் மூலம் நாம் வாழ்ந்திடும் இந்த பூமியில் சொந்தமாக ஒருபிடி மண் இல்லையே என்று ஏங்கித் தவித்திடும் நிலையை மாற்றி அரசே முன்வந்து அரசு நிலத்தை பட்டா போட்டு வழங்கிடும் ஒரு கனிவானஅரசு அம்மாவுடைய அரசு என்பது இந்த அரசாணையின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று பேசினார்.
இவ்விழாவில் திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரவிகுமார்,குணசேகரன்,ராமச்சந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிஅணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் சரவணன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,கோடீஸ்வரன்,ஜெயமணி,செல்வம்,ஆறுமுகம்,வேல்ராமகிருஷ்ணன்,மாரிச்சாமி,கண்ணன்,செல்வம்,போதுராமன்,சக்தி,விஜி,போதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.