முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையேயான பதற்றத்தை குறைப்பதுதான் எங்களின் நோக்கம்: சவுதி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் எங்கள் நோக்கம் என்று சவுதி தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தார்.

இது குறித்து இஸ்லமாபாத்தில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபைர் கூறும் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் எங்களுடைய நோக்கம். இரண்டு அண்டை நாடுகளும் நிலவும் வேறுபாட்டை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பாதையை எதிர்நோக்கியுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து