எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அ.தி.மு.க. பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கங்கை - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
56 பக்க அறிக்கை
பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட அதனை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். 56 பக்கங்கள் கொண்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. வண்ண வடிவமைப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளது. 38 அத்தியாயங்களை கொண்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். அதன் விபரம் வருமாறு:-
நாடு முழுவதும்...
நாடு முழுவதும் வாழுகின்ற வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கும், தங்கள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திடத் தேவையான வருமானம் இன்றி அல்லலுறும் மக்களுக்கும் மாதந்தோறும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரூபாய் 1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள், கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்பு தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோருக்கு மாதம் தோறும் ரூபாய் 1,500 உதவித் தொகையை நேரடியாக அவர்தம் வங்கிக் கணக்கில் செலுத்தும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அ.தி.மு.க. அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.
பிலிப்பைன்ஸ் பாணியில்...
எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் டெஸ்டா நிறுவனம், அந்த நாட்டின் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகெங்கும் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வண்ணம் வழங்கி வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாதிரியாகக் கொண்டு நம் நாட்டிலும் புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்தியஇளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் திறன் மேம்பாடு அளிக்கவும், அத்தகைய பயிற்சிகளைப் பெற்றோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறுவதை எளிதாக்கிடவும் புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும்.
காவிரி - கோதாவரி இணைப்பு
காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த, மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெருமழை வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி, நிதி ஆதாரத்தைப் பெற்று, விரைந்து செயல்படுத்த அ.தி.மு.க. நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை
நொய்யல் ஆற்றையும், மேற்கு தொடர்ச்சி மலையையும் மையமாக கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழை, வெள்ள நீரை கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி மற்றும் மதுக்கரை வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன் துறை,கோவை புதூர், போளுவாம்பட்டி வனச் சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின், மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில், காவேரி (கட்டளை கதவணை), அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம். மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளிலும், மற்ற வங்கிகளிலும் பெற்றுள்ள கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.
கடன் சுமையை நீக்க...
வேளாண்மை கடன்களால் அல்லலுறும் விவசாயிகளுக்கு அவர்தம் கடன் சுமையை நீக்கும் வகையில் உறுதியான திட்டம் ஒன்றினை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அ.தி.மு.க வலியுறுத்தும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தும். மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தும். தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்கப்படும் வகையில் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும், இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி. சி.வி.சண்முகம், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்
* வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
* பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் தேசிய திறன் மோம்பாடு திட்டம் அமைக்கப்படும்
* காவிரி-கோதாவரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* கடலில் வீணாக நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்
* தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்
* கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படும்
* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும்
* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* காவிரி டெல்டாவை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* மதம் மாறினாலும் சாதி ரீதியிலான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்டம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.