முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உறுதி செய்தது இலங்கை அரசு

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
Image Unavailable

கொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது சி 4 ரக வெடிகுண்டுகள் என விசாரணை அதிகாரிகள் கருதினர். அவற்றை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு சி 4 ரகத்தை விட அதிக எரிசக்தி கொண்டது. எனவே இந்த வெடிகுண்டுகளை தயாரிக்க நிறைய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருப்பதால் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

ஷாங்ரிலா ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலை படை பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவரது உடல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ‌ஷக்ரான் காசிம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே குண்டு வெடிப்பில் அவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து