எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது. இதனையடுத்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் கூறியதாவது:
வீரர்களின் சார்பில் ஊடகங்களிடம் கோரிக்கை ஒன்றை விடுக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாரையும் மோசமாக நடத்தக் கூடாது. அது சரியானதும் அல்ல. இப்போது ரசிகர்கள் பேசுவதை கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக நான் விளக்கம் தருவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
_________________________
பாக். வீரர்களை திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!
உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது, மோசமான ஃபீல்டிங், பேட்டிங்கில் ஏமாற்றம் என பாகிஸ்தான் அனைத்திலும் சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பொறுப்பற்ற விளையாட்டே தோல்விக்குக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி உடனான போட்டிக்கு முன் சோகிப் மாலிக், சானியா மிர்சா உடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்கள் வாகப் ரியஷ், இமாம்-உல்-ஹக் ஆகியோர் இரவு பார்டிக்கு சென்றதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மான்செஸ்டரில் உள்ள பிரபல விடுதியில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்ததாக அந்தநாட்டு ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். சானியா மிர்சாவுடன் பார்டிக்கு வந்த சோகிப் மாலிக் ஹூக்கா(Hookah) புகைத்ததை பார்த்தாக ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பீட்சா, பர்கர் போன்ற உணவை எடுத்துகொண்டாக கூறினார். இந்தப் பார்டி இரவு 2 மணி வரை நடந்தாக ரசிகர்கள் பலர் இணயைத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பார்டியில் கலந்து கொண்டது வெட்கடப்பட வேண்டிய செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.
____________
துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்
கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த கூடைப்பந்து அணி, என்பிஏ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டொரன்டோ நகரில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் அணிவகுத்து சென்றனர். இந்நிலையில், நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகே உள்ள பே அண்ட் ஆல்பர்ட் தெருக்களில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது இரண்டு தெருக்களிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, அருகில் உள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடைப்பந்து அணிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ கலந்துகொண்டார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
____________
பாக். ரசிகருக்கு ஆறுதல் கூறிய நடிகர் ரன்வீர் சிங் !
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக ஏழுமுறை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டியினை காணவந்த அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவருக்கு போட்டியினை காணவந்த இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகரை கட்டி அணைத்து, “உங்கள் நாட்டு அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிக நுட்பமாகவும் விளையாடினர். ஆகையால் நம்பிக்கையினை இழக்க வேண்டாம் எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது” என ரன்வீர் சிங் ஆறுதல் கூறுகிறார்.
____________
வங்காள தேச கேப்டன் புகழாரம்
உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 322 ரன் இலக்கை எடுத்து வங்காளதேசம் அதிர்ச்சி கொடுத்தது. இதில் வெற்றியும் பெற்றது. வங்காளதேசம் பெற்ற 2-வது வெற்றியாகும். வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் மோர்தாசா கூறியதாவது:- முஷ்டாபிஜூர் ரகுமான் ஒரே ஒவரில் 2 விக்கெட் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்புமுனை. இதனால்தான் வெஸ்ட்இண்டீஸின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
ஷாகிப் ஹசன் எங்கள் பேட்டிங்கில் முக்கியத்துவம் பெற்றவர். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் ரன்களை குவித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக லிட்டோன் தாஸ் விளையாடினார். ஷாகிப் அல் ஹசன் ஒரு அபூர்வமான வீரர். அவரைப்போல மற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
____________
களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன் - விஜய் சங்கர்
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடியதாலேயே அணிக்கு சிறப்பான பங்களிப்பை தர முடிந்தது என இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய அவர், தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
மேலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்நிலையில் இப்போட்டி குறித்து தெரிவித்த விஜய் சங்கர், பந்துவீச தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். களச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை உடனடியாக தயார்படுத்திக்கொண்டதாலேயே தன்னால் சிறப்பாக செயல்படமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
___
ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கைது
பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த மைக்கேல் பிளாட்டினி (வயது 63) ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2007-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010-ல் பிபா-வால் நடத்தப்பட்டது.
அப்போது தனது பதவியை பயன்படுத்தி 2022-ல் கத்தார் உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெறுவற்காக மறைமுகமாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி இன்று பிரான்ஸில் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
___________
பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது. இது குறித்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சானியா, நான் உங்கள் குழந்தையை நினைத்து உண்மையில் வருந்துகிறேன். உங்கள் குழந்தையை ஷிசா பேலஸ் போன்ற துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் சென்று இருக்கிறீர்களே. எனக்கு தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு துரித உணவுகள் கொடுப்பது தீங்கானது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் என் குழந்தையை துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் செல்லவில்லை. இவ்வாறு அழைத்துச் செல்வது உங்களுக்கு தெரிந்த, உலகில் உள்ள மற்றவர்களின் பணியாகத்தான் இருக்கும். மற்றவர்களை காட்டிலும் என் மகனை நான் கவனமாக பராமரித்து வருகிறேன். மேலும் நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீஷியன் அல்ல. அவர்களுக்கு நான் தாயோ, ஆசிரியரோ அல்ல என்பதை உணருங்கள். அவர்கள் எப்போது விழிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள் என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறைக்கு நன்றி’ என கூறியுள்ளார்.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.