எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டபணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு, அதனை முதன்மைபடுத்தவும், முன்னுரிமை அளித்து செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஆய்வு...
பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிடத் துறையின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் மற்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, 2018-19 மற்றும் முந்தைய ஆண்டு துவங்கிய அணைக்கட்டுகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை கட்டுமானம் செய்தல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து பணிகளை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அறிவுறுத்தல்...
குடிமாரமத்து திட்டத்தின் மூலம் 2017-18-ல் 29 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,511 பணிகளில் 1,311 பணிகள் முடிக்கப்பட்டதையும், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 2018-19-ல் 31 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,829 பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள முதல்வர் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பானை செய்பவர்களுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டைவிட சிறப்பாக செயல்படுத்திட துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
18 மாவட்டங்களில்...
உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளும் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலம் 22 மாவட்டங்களில் உள்ள 1,325 ஏரிகள் மற்றும் 107 அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டு, மேலும், நடப்பாண்டில் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் 906 ஏரிகள் மற்றும் 183 அணைகட்டுகளின் புனரமைப்பு பணிக்கு மதிப்பீடு தயாரிக்கப்படுவதை துரிதப்படுத்தி விரைந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டார். கடலூர் - நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனுர் - குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய தலை மதகுகளுடன் கூடிய கதவணை ரூ. 428 கோடி செலவில் கட்டப்படும் பணி மற்றும் திருச்சி முக்கொம்பில் ரூ. 387 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணியின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தார்.
முதல்வர் உத்தரவு...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீரை செரிவூட்டுவதற்கு ஆறுகள், ஓடைகளின் குறுக்கே மூன்று ஆண்டுகளில் 1,000 கோடியில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 56 பணிகளில், 17 பணிகள் முடிக்கப்பட்டு தற்போது 39 பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணி ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் துவங்கி நடைபெறுவதை ஆய்வு செய்தார். சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்படும் புதிய நீர்தேக்கம் பணியில் இதுவரை 95 சதவீத பணி முடிந்துள்ளதையும், மீதமுள்ள பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ஆறுகளை இணைக்கும்...
தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தில் பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - செய்யாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) - பாலாறு இணைப்பு, காவேரி - (மேட்டூர் அணை) - சரபங்கா - திருமணிமுத்தாறு -அய்யாறு இணைப்பு, காவேரி - அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகிவற்றின் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை முதன்மை படுத்தவும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயலாக்கத்திற்கு எடுத்து வர கேட்டுக் கொண்டார். பணியின் முன்னேற்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அரசு செயலாளர் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.
கட்டிடப் பணி...
பொதுப்பணித்துறையின் கட்டிடம் அமைப்பின் மூலம் 2018-19-ம் ஆண்டு பல்வேறு துறைகளுக்கு கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் ஆய்வு செய்தார். புராதன கட்டிடப்பணியான சென்னை சேப்பாக்கம், ஹீமாயுன் மஹால் கட்டிடத்தின் புனரமைப்பு பணி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
மும்பையில் அதிர்ச்சி சம்பவம்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர் பலி
08 May 2024மும்பை : மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.